மகாராஷ்டிராவில் மீண்டும் பரபர.. உத்தவ் தாக்கரே அரசு டிஸ்மிஸ்? ஜனாதிபதி ஆட்சி அமல்? சிவசேனா விளக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமலாக்க உள்ளதாக பரவிய செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியில் இருந்து வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா பாதிப்பு
தற்போது நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக மகாராஷ்டிரா மாநிலம்தான் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் மும்பையில்தான் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவை தடுக்க மகாராஷ்டிரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூடகமாக பாஜக கருத்து
மகாராஷ்டிராவின் பாஜக தலைவர்கள், பொறுத்திருந்து பாருங்க .. காலம் கனிகிறது.. எல்லாம் நடக்கப் போகிறது என பூடகமாகவே பத்திரிகையாளர்களிடம் கூறி வருகின்றனர். இதற்கு ஏற்ப திடீரென ஆளுநர் கோஷ்யாரியை தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதனால் மகாராஷ்டிராவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவசேனா பதில்
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசும் பாஜகவும் முயற்சிக்கிறது. ஆனால் நிச்சயம் அவர்களால் இந்த சதியில் வெல்ல முடியாது என காட்டமாக கூறினார். முன்னதாக உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்ததார்.

தொடர் புகார்- பரபரப்பு
மகாராஷ்டிராவின் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து ஆளுநர் தலையிடுகிறார் என தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இன்னொரு பக்கம், மகாராஷ்டிரா அரசு கொரோனா விவகாரத்தை சரியாக கையாளவில்லை என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு - ஜனாதிபதி ஆட்சி அமல் என பரபரப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications