மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை போலீஸ் கமிஷனர் என அறிமுகப்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமி ஒருவர் நேற்று சமூக வலைத்தளங்களில் மராத்தி மொழியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அவர் வெளியிட்ட வீடியோவில், மும்பையில் தாக்குதல் நடக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள், வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம். ரயில் நிலையங்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம் உட்பட அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

ஆனால், அந்த வீடியோவில் பேசியிருந்தது மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பெயரில் யாரோ ஒரு விஷமி போலியாக இந்த வீடியோவை வெளியிட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஹேமந்த் மகாஜன் போன்ற தோற்றத்தில் ஒரு வீடியோவை அந்த ஆசாமி வெளியிட்டார் அந்த வீடியோவில், "காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனமும் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும். நாட்டின் 19 நகரங்களை குறிவைத்துள்ளனர்.
எல்லையில் நமது நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் வலிமை நமக்கு உள்ளது. ஆனால் வெடிகுண்டு போன்ற தாக்குதலில் ஈடுபட்டால் மிகவும் கடினம். அதை அரசால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் மக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என கூறியுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பலரும் உண்மை என நம்பி தெரிந்தவர்களுக்கு அனுப்பி உள்ளனர். இந்த வீடியோ போலீயானது என்பதை பின்னர் போலீசார் அறிவித்தனர்.
இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கருதப்படுவதால் மும்பை உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications