ராமர் கோவில் கட்டினால் கொரோனா மறைந்துவிடுமென சிலர் நம்புகிறார்கள்.. சரத் பவார் விமர்சனம்!
மும்பை: ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ள நிலையில் இதுவரை நான்கு முறை அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு சார்பாக இந்த பணிகள் நடக்கிறது .
ராமர் கோவிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அவர் தனது விமர்சனத்தில் ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும். கொரோனா மாயமாக மறையும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
அவர்கள் இதை திட்டமிட்டு செய்ய வாய்ப்பு உள்ளது. எனக்கு தெரியவில்லை. அவர்கள் கொரோனா பரவலை தடுக்கவும், மக்களுக்கு உதவவும் உழைக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை கொரோனா வைரஸ்தான் தற்போது மக்களுக்கு பெரிய பிரச்சனை. மத்திய , மாநில அரசுகள் அதில்தான் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறியுள்ளார். சரத் பவாரின் இந்த கருத்து மஹாராஷ்டிரா அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications