மும்பையில் கன ஜோராய் தொடங்கிய பருவமழை..கொட்டித்தீர்த்தது - வெள்ளத்தில் நீந்தும் வாகனங்கள்

மும்பையில் தென்மேற்குப் பருவமழை கனஜோராக தொடங்கியுள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மராட்டிய மாநில தலைநகரத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பருவமழை தொடங்கியுள்ளதன் அறிகுறியாக ஆரம்ப நாளிலேயே மழை வெளுத்து வாங்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலமாகும். கடந்த மே மாத இறுதியில் அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. கேரளாவில் ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய பருவமழை பல பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதால் 48 மணி நேரத்துக்கு மராட்டியத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மும்பை மற்றும் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் சனிக்கிழமை வரை மழை கொட்டித்தீர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மழை வெள்ளத்தில் மிதக்கும் மும்பை

வானிலை ஆய்வுமையம் கணித்தது போல மும்பையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல வாகனங்கள் வெள்ள நீரில் நீந்திச் செல்கின்றன.

வங்கக்கடலில் காற்றழுத்தம்

வங்கக்கடலில் காற்றழுத்தம்

இதனிடைய வங்கக் கடலில் வரும் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் அரபிக் கடலில் தென்மேற்கு காற்று வேகமாக வீசும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை

தென்மேற்குப் பருவமழை

மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் 11ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் ஜூன் 11-13ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

கனமழை கொட்டித்தீர்க்கும்

கனமழை கொட்டித்தீர்க்கும்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை தொடங்கி கொல்கத்தா வரை பல்வேறு முக்கிய நகரங்களால் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும். திசா, மேற்கு வங்கத்தில் அதி தீவிர கனமழை ஜூன் 10, 11 தேதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+