இதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்
Recommended Video
மும்பை: முதல்வராக பதவியேற்றதுமே, சத்ரபதி சிவாஜி பெயரை பயன்படுத்தி, தேவேந்திர பட்னாவிசுக்கு பதிலடி கொடுத்தார் உத்தவ் தாக்ரே.
சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, மகாராஷ்டிரா பாரம்பரிய தொப்பி அணிந்து வந்திருந்தார் உத்தவ் தாக்ரே. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதும், உத்தவ் தாக்ரே பேசியதாவது: சத்ரபதி சிவாஜியின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
சிவாஜி இந்த நாட்டுக்கே உரியவர் என்றாலும், அவர் மகாராஷ்டிரா மண்ணின் மகன். நாங்கள் எல்லோருமே, சத்ரபதி சிவாஜி வழி வந்த பிள்ளைகள்.
|
குற்றம் இல்லை
தந்தையின் பெயரில் பிள்ளைகள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் தவறு கிடையாது. அதேபோல, சிவாஜியின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது குற்ற செயலா? அது குற்றம் என்றால் நாங்கள் மீண்டும், மீண்டும் அதையே செய்வோம். இவ்வாறு உத்தவ் தாக்ரே கூறினார்.
|
பட்னாவிஸ் பேட்டி
முன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.

பட்னாவிஸ் பேட்டி
முன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.

செல்லாது, செல்லாது
மேலும் சட்டசபையில் வந்தே மாதரம் இசைக்கப்படவில்லை, எனவே இந்த அவை கூடியது செல்லாது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார். இவ்வாறு அவை கூட்டத்தையே செல்லாது என தொடர்ந்து கூறியபடி இருந்தார் பட்னாவிஸ். இதற்கு பதிலளிக்கும் விதமாக, உத்தவ் தாக்கரே இவ்வாறு ஒரு கருத்தை பதிவுசெய்தார்.

உத்தவ் தாக்ரே அரசு வெற்றி
குறைந்தது, 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இன்று, சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே, 169 எம்எல்ஏக்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முதல்வராக வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், இவ்வாறு சத்ரபதிசிவாஜி குறித்து பேசினார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications