தங்கதுரை எல்லாம் ஓரளவுக்கு தான்..ரூ.45 லட்சம் சம்பளம் எப்படி பத்துமாம்! சீரியஸாக புலம்பிய ஐடி ஊழியர்
மும்பை: 3 ஆண்டுகள் ஐடி துறையில் அனுபவம் கொண்ட ஒருவருக்கு ஆண்டுக்கு 45 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாம். ஆனால், இந்த சம்பளம் குறைவு எனப் புலம்பும் அவர், இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை.. இவ்வளவு குறைவாகச் சம்பளம் கிடைப்பதை ஏற்க முடியவில்லை என ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை வேகமாக மாறி வருகிறது. நமது நாட்டில் இப்போது அதிக சம்பளத்தை வழங்கும் துறையாக ஐடி துறை இருக்கிறது. ஆனால், அங்கு வழங்கப்படும் சம்பளமே கூட போதவில்லை என பலரும் சொல்வதை நாம் பார்த்திருப்போம்.

ஐடி ஊழியர்
அப்படி தான் வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ள ஐடி ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இணையத்தில் விவாதத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
அதாவது 3 ஆண்டு அனுபவத்திற்கு பிறகும் தனக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் என்ன செய்யலாம் என்று சமூக வலைத்தளங்களில் அவர் ஆலோசனை கேட்கவே அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
ரூ.45 லட்சம் தான் சம்பளம்
மெம்பர் ஆஃப் டெக்னிக்கல் ஸ்டாப் என்ற பணிக்கு அவர் தேர்வாகி இருக்கிறாராம். அதில் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 3 லட்சம் ரூபாய் போனஸ் கிடைக்குமாம். இதுபோக 52,000 டாலர் மதிப்புள்ள பங்குகளும் 4 ஆண்டுகளில் படிப்படியாகக் கிடைக்க ஆரம்பிக்குமாம். இது பார்க்க நல்ல ஒரு வேலை மாதிரியே தெரிகிறது.
ஆனால், இந்த வேலை தான் ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தனது தற்போதைய சம்பளத்திற்கு இணையானது.. அல்லது சில வழிகளில் பார்த்தால் குறைவாகக் கூட இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து தனக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் வருவதாகப் பதிவிட்டுள்ள அவர், ஆனாலும் அதில் சேர ஆர்வம் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றம்
அந்த நபர் மேலும், "இந்த வேலைவாய்ப்பு ஆஃபரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பொதுவாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எனது நண்பர்கள் 6-8 மாதங்களுக்கு முன்பே 50+ பெற்றனர்.. ஆனால் இப்போது அவர்களால் இதுவே பெஸ்ட் என்று கூறுகிறார்கள்.. நான் என்ன செய்வதென்று புரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
ட்விட்டர் தளத்தில் அவரது போஸ்ட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. மூன்று வருட அனுபவம் உள்ள ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்குவதே அதிகம் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அதேநேரம் இன்னும் சிலர் இது ஏமாற்றம் அளிப்பதாகவும், மார்க்கெட் முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக வழங்குவதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அவரது இந்த பதிவு தொழில்நுட்பத் துறை வேகமாக மாறி வருவதையே காட்டுகிறது. தற்போதைய சந்தையில் எல்லா வேலைகளுக்கும் முன்பு கிடைத்த சம்பளத்தை விட இப்போது சம்பளம் குறைந்தே வருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். சரி நீங்க சொல்லுங்க 3 ஆண்டு அனுபவம் கொண்ட இவருக்கு இந்த சம்பளம் குறைவா.. இல்லை அதிகமா?
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications