அந்த 6 வார்த்தை.. ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டா பதிவை அனைவரும் பகிர்வது ஏன்? உருக்கமான தகவல்
மும்பை: முன்னணி தொழிலதிபராக அறியப்பட்ட டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நலம் குறித்து ரத்தன் டாடா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பதிவில் ரத்தன் டாடா உருக்கமாக கூறியிருந்த 6 வார்த்தை தான் காரணமாகும்.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமான உடல்நல பிரச்சனையால் ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்தன் டாடாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். நேற்று இரவு 11. 40 மணியளவில் ரத்தன் டாடாவின் மரணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழில் மட்டுமின்றி ஏழைகள், தொழிலாளர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவராக ரத்தன் டாடா திகழ்ந்தார். இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சிக்கு குறிப்பாக மோட்டார் துறை வளர பெரிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா தான்.
இந்நிலையில் தான் தற்போது ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவை பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதற்கு அந்த பதிவில் ரத்தன் டாடா குறிப்பிட்டு சொன்ன 4 வார்த்தைகள் தான் காரணம். அதாவது கடந்த 7 ம் தேதி ரத்தன் டாடா பற்றி ஒரு தகவல் பரவியது. ரத்தன் டாடா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் என்ற தகவல் பரவியது.

இந்த தகவலை தொடர்ந்து ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.
மேலும் இந்த அறிக்கையை பதிவிட்ட அந்த பதிவில் ரத்தன் டாடா, ‛‛Thank you for thinking of me'' எனக்கூறி வெள்ளை நிற இதய இமோஜியை பதிவிட்டு இருந்தார். அதாவது என்னை நினைத்ததற்கு நன்றி எனக்கூறி ஹார்ட்டை பதிவிட்டு இருந்தார். கடந்த 7 ம் தேதி ரத்தன் டாடா இப்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அவர் மறைந்துள்ளார். இனி ரத்தன் டாடா என்பவர் நம் அனைவரின் நினைவில் மட்டுமே இருப்பார் என்பதால் அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவை பலரும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications