பால்தாக்கரே கொள்கையை காற்றில் பறக்கவிட்ட பேரன்... மராட்டிய சிங்கத்திற்கு வந்த சோதனை
Recommended Video
இந்நிலையில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வீட்டில் உள்ள பால்தாக்கரே அறைக்கு சென்ற ஆதித்யா தாக்கரே சுமார் 15 நிமிடம் வரை தனது தாத்தாவின் கட்டிலில் தலைவணங்கி பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என பால்தாக்கரே படத்தின் முன்பு நின்று உத்தவ்தாக்கரே கண்ணீர்மல்க வேண்டியுள்ளார். மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் கொள்கைகளை பேரன் ஆதித்யா தாக்கரே காற்றில் பறக்கவிட்டு விட்டு, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மராட்டிய சிங்கம் என்றழைக்கப்பட்டவர். மராட்டியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஆதரவுக்குரல் கொடுப்பதுடன் களத்தில் இறங்கி பக்கபலமாகவும் இருந்தவர். இப்படி பொதுவாழ்வில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய பால்தாக்கரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

பால்தாக்கரே உயிருடன் இருந்தபோது அவர் மேடைக்கு மேடை முழங்கியது, நானோ எனது வாரிசுகளோ எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிடமாட்டோம், அரசுப்பதவிகளுக்கு வர மாட்டோம் என்பது தான். ஆனால் இன்று அவர் கொள்கையை மங்கச்செய்து தேர்தலில் போட்டியிடுவது வேறுயாருமல்ல அவரின் சொந்தப்பேரன் ஆதித்யா தாக்கரே தான்.
பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் ஆதித்யா தாக்கரேவின் இந்த முடிவை ஒரு போதும் அனுமதித்து இருக்கமாட்டார் என்றும், உத்தவ்தாக்கரே மகன் மீது வைத்துள்ள பாசத்தால் தந்தையின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படுகிறாரோ என்ற நெருடல் உள்ளதாக வெம்புகின்றனர் சிவசேனா அனுதாபிகள்.
இந்நிலையில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வீட்டில் உள்ள பால்தாக்கரே அறைக்கு சென்ற ஆதித்யா தாக்கரே சுமார் 15 நிமிடம் வரை தனது தாத்தாவின் கட்டிலில் தலைவணங்கி பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என பால்தாக்கரே படத்தின் முன்பு நின்று உத்தவ்தாக்கரே கண்ணீர்மல்க வேண்டியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications