மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. திடீரென ரகசிய இடத்தில் சரத்பவாரை சந்தித்த உத்தவ் தாக்ரே

Google Oneindia Tamil News

Recommended Video

    Sources says that Uddhav Thackeray will be CM of Maharastra

    மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நிலைமை நொடிக்கு நொடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

    மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உத்தவ் தாக்கரே நாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி என முடிவெடுக்கிறதோ, அதை பொருத்துதான் தங்கள் முடிவு அறிவிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

    uddhav thackeray meets sharad pawar at undisclosed location

    ஆளுநரின் கெடு முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தீவிரமான இறுதி கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் உத்தவ் தாக்ரே. இன்று மதியம் உத்தவ் தாக்கரே தனது வீட்டில் இருந்து எங்கோ, கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    ஆனால், சிவசேனா வட்டார தகவல்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருடன் அவர் ரகசிய இடத்தில் சந்திப்பு நடத்தி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்திய தாக்கரேவை முதல்வரானால், சிவசேனா மற்றும் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே உறுதி அளித்து இருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ரகசிய சந்திப்புகள், அவசர ஆலோசனைகள், என மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    English summary
    Uddhav Thackeray meets sharad pawar at undisclosed location over Maharashtra government formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X