தமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க
மைசூர்: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே இன்று அதிகாலை வாகனங்களில் சென்றவர்கள் அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டனர்.
ஆத்தாடி எந்தா தண்டி.. என்று சொல்லும் அளவுக்கு, 2 பெரிய யானைகள், அவற்றின் 2 குட்டிகளுடன் வாகனங்களை வழிமறித்துள்ளதே இதற்கு காரணம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

வன விலங்குகள்
ஆசனூர், தலமலை மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

5 யானைகள்
இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் மூன்று யானைகள் மற்றும் இரண்டு குட்டிகள் என ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றபடி வாகனங்களை வழிமறித்தன.

வாகனங்கள் நிறுத்தம்
குட்டிகளுடன் நின்ற யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் யானைகள் குட்டிகளுடன் சாலையில் நடமாடிய பின் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையோர வனப்பகுதிக்கு சென்றன.

வாகன ஓட்டிகள் அச்சம்
இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் அந்த இருளில், கருப்பு நிற யானைகளை மொத்தமாக பார்த்த வாகன ஓட்டிகள் அடிவயிறு கலங்கிவிட்டதாம். யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த ஜாக்கிரதையோடு வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications