மேகதாது அணை கட்டுவதிலேயே குறியாக இருக்கும் சித்தராமையா, டிகே சிவகுமார்- தமிழகத்துடன் பேச தயாராம்!
மைசூர்: காவிரியின் குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு) என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையானது பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்கானதுதான்; இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஒரு மாதமாக கொட்டித் தீர்த்ததால் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதேபோல கபினியில் இருந்தும் 30,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டது.

காவிரியில் பெருமளவு தண்ணீரை ஒரேயடியாக கர்நாடகா திறந்துவிட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளமாக காவிரி பாய்ந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் காவிரி ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் பாகினா பூஜை நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனாலும் தமிழ்நாடு அரசு இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டு அரசுடன் மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். மத்திய அரசு மட்டும் ஒப்புதல் கொடுத்துவிட்டால் மேகதாது அணையை விரைவாக கட்டி முடிப்போம் என்றார்.
மேலும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீணாகவே பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. இப்படி காவிரி நீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் மேகதாது அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த ஒரு அணை கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications