மேகதாது அணை கட்டுவதிலேயே குறியாக இருக்கும் சித்தராமையா, டிகே சிவகுமார்- தமிழகத்துடன் பேச தயாராம்!
மைசூர்: காவிரியின் குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு) என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையானது பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்கானதுதான்; இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஒரு மாதமாக கொட்டித் தீர்த்ததால் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதேபோல கபினியில் இருந்தும் 30,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டது.

காவிரியில் பெருமளவு தண்ணீரை ஒரேயடியாக கர்நாடகா திறந்துவிட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளமாக காவிரி பாய்ந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் காவிரி ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் பாகினா பூஜை நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனாலும் தமிழ்நாடு அரசு இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டு அரசுடன் மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். மத்திய அரசு மட்டும் ஒப்புதல் கொடுத்துவிட்டால் மேகதாது அணையை விரைவாக கட்டி முடிப்போம் என்றார்.
மேலும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீணாகவே பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. இப்படி காவிரி நீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் மேகதாது அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த ஒரு அணை கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications