மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடி இழப்பீடு! கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மைசூர்: மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மைசூர் அரண்மனை வளாகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலத்தை கர்நாடக அரசு கைப்பற்றியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. இதை சீர் செய்ய பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை விரிவுப்படுத்த கர்நாடகா மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த பணிகளுக்காக, மைசூர் அரண்மனைக்கு சொந்தமான 15.39 ஏக்கர் நிலத்தை மாநில காங்கிரஸ் அரசு 2023 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அரசு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம் 15.39 ஏக்கருக்கு ரூ 3400 கோடி இழப்பீடாக வழங்க கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கர்நாடகா அரசும் உச்சநீதிமன்ற பதிவாளர் பெயரில் ரூ 3400 கோடி டெபாசிட்டை செய்தது. இதற்கு அரச குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரூ 3400 கோடியை உடனடியாக அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.
மைசூர் அரண்மனை 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 1912 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41,47,913 ரூபாய் ஆகும். இங்கு ராஜ தர்பார் மண்டபமும் மல்யுத்த மைதானமும் அந்தப்புரமும் உள்ளது. இங்கு 175 அறைகள் உள்ளன. மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும்.
இங்கு திறந்தவெளி கூடங்கள், மாட மாளிகை, ஆயுத அறை, நூலகம், லிஃப்ட், பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றவது மாடியில் காணப்படுகிறது. இது மரத்தாலான அரண்மனை என அழைக்கப்படுகிறது. இங்கு தீயணைக்கும் எந்திரங்களும் உள்ளன.
இங்கு 18 கோயில்கள் உள்ளன. இந்த அரண்மனை பழைய பரகலா மடத்தின் தலைமையகத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 112 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications