Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடி இழப்பீடு! கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மைசூர்: மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மைசூர் அரண்மனை வளாகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலத்தை கர்நாடக அரசு கைப்பற்றியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. இதை சீர் செய்ய பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை விரிவுப்படுத்த கர்நாடகா மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

supreme court mysuru palace

இந்த பணிகளுக்காக, மைசூர் அரண்மனைக்கு சொந்தமான 15.39 ஏக்கர் நிலத்தை மாநில காங்கிரஸ் அரசு 2023 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அரசு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம் 15.39 ஏக்கருக்கு ரூ 3400 கோடி இழப்பீடாக வழங்க கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி கர்நாடகா அரசும் உச்சநீதிமன்ற பதிவாளர் பெயரில் ரூ 3400 கோடி டெபாசிட்டை செய்தது. இதற்கு அரச குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரூ 3400 கோடியை உடனடியாக அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.

மைசூர் அரண்மனை 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 1912 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41,47,913 ரூபாய் ஆகும். இங்கு ராஜ தர்பார் மண்டபமும் மல்யுத்த மைதானமும் அந்தப்புரமும் உள்ளது. இங்கு 175 அறைகள் உள்ளன. மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும்.

இங்கு திறந்தவெளி கூடங்கள், மாட மாளிகை, ஆயுத அறை, நூலகம், லிஃப்ட், பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றவது மாடியில் காணப்படுகிறது. இது மரத்தாலான அரண்மனை என அழைக்கப்படுகிறது. இங்கு தீயணைக்கும் எந்திரங்களும் உள்ளன.

இங்கு 18 கோயில்கள் உள்ளன. இந்த அரண்மனை பழைய பரகலா மடத்தின் தலைமையகத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 112 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+