நாகைக்கு அடுத்தடுத்து அடி.. புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி பலி
சாலை விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
நாகை: நாகை மக்களுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. இன்று காலை சாலை விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தார்கள். புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள் இந்த பெண்கள் நால்வரும் என்பது பரிதாபத்துக்குரிய செய்தி!!
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக முக்கியமானது நாகை. வீடு வாசல், நிலபுலன்களை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் வந்துபோய் ஒரு வாரம் ஆகியும் அவர்களால் பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.அப்படித்தான் நாகையில் நீர்நிலை முகாமில் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நீர்நிலை முகாம்
இந்நிலையில் இன்று காலை நீர்நிலை முகாமில் இருந்து தங்கள் பகுதிக்கு செல்லலாம் என்று நினைத்து 4 பெண்கள் சாலையை கடக்க முயன்றனர்.

4 பெண்கள் பலி
அப்போது அந்த வழியாக படுவேகத்தில் வந்த மினி வேன் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. 4 பெண்களுமே உடல்நசுங்கி அங்கேயே உயிரிழந்தார்கள். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் அமுதா, சுமதி, சரோஜா, ராஜேஸ்வரி ஆகியோர் என தெரியவந்தது.

தீவிர சிகிச்சை
இதில் டிரைவர் மணிகண்டன் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை பரிதாபமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து சோகம்
ஏற்கனவே புயலால் எல்லாத்தையும் இழந்து தவித்து வந்த நிலையில், பெண்கள் இப்படி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினரிடையே மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications