விஜய் செல்லும் இடங்களில் இன்று மின்தடை.. நாகை தவெக-வினரின் விநோத கோரிக்கையை ஏற்ற மின்வாரியம்!
நாகப்பட்டினம்: நடிகரும், தவெக தலைவரும் நடிகருமான விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தின்போது அவரது தொண்டர்கள் மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறலாம் என்பதால் நாகப்பட்டினத்தில் விஜய் பிரசாரம் செய்யும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தவெக சார்பில் மின்தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று மின்வாரியம் இன்று மின்தடை செய்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் மக்களை சந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மற்றும் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விஜய் அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் வந்து பிரசாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் தான் விஜயின் பிரசாரத்தையொட்டி நாகையில் அவர் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் காலை 11 மணிக்கு நாகையில் பிரசாரத்தை தொடங்கினார்.திறந்த வாகனத்தில் அவர் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அவரை பார்க்க தவெக தொண்டர்கள் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.
நாகை வாஞ்சூர் ரவுண்டனா முதல் புத்தூர் அண்ணா சிலை வரை நடிகர் விஜய் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஞ்சூர், நாகூர், காடம்பாடி, செல்லூர், புத்தூர், புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தவெக தான். தவெக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை தான். நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்தார். அதாவது, விஜயை பார்க்க அவரது ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறினர். இதனால் அவர்களை மின்சாரம் தாக்கலாம்.
இதனை தடுக்கவே தவெக சார்பில் விஜய் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் தற்காலிகமாக மின்தடை ஏற்படுத்த தவெக சார்பில் மின் வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற மின்வாரியம் இன்று மின்தடை செய்துள்ளது.
முன்னதாக, கடந்த 13ம் தேதி முதல் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை திருச்சியில் விஜய் தொடங்கினார். அன்றைய தினம், ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். உயரமான கட்டடங்கள், மின்கம்பங்கள், மரங்கள், டிரான்ஸ்பார்மரில் கூட பலர் ஏறினர். இதனால் விஜயே பதறிப்போனார்.
அதேபோன்ற சம்பவம் நாகையிலும் நடக்கலாம். இதனால் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க தவெக சார்பில் மின்வாரியத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதும், அதனை ஏற்று மின்வாரியம் மின்சாரத்தை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications