கஜா சேதத்திலிருந்து மீளாத சோகம்.. தவணை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல்.. விவசாயி தற்கொலை முயற்சி!
வேதாரண்யம்: கடன் தவணையை கட்ட தவறிய விவசாயிடமிருந்து டிராக்டரை தனியார் நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்ததை கண்டித்து விவசாயி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். விவசாயியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர் தனது விவசாய பயன்பாட்டுக்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோழமண்டலம் நிதி நிறுவனத்தில் ரூ 4 லட்சத்து 9 ஆயிரம் கடன் பெற்று டிராக்டர் ஒன்று வாங்கினார்.
இதற்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ 35,815 தவணை செலுத்த வேண்டும்.
3 தவணை செலுத்தி விட்ட நிலையில், கடந்த 20-ம் தேதி நான்காவது தவணை செலுத்த வேண்டும். இந்த நிலையில் செந்தில்நாதன் கஜா புயலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
இதனால் செந்தில்நாதனை தொடர்பு கொண்ட நிதி நிறுவன ஊழியர்கள், தங்களது டிராக்டரை பதிவு செய்ய வேண்டுமென கூறி டிராக்டரை நாகையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்து வரும்படி கூறினர்.
அதனை நம்பி, ஆர்டிஓ அலுவலகத்துக்கு டிராக்டரில் வந்து பதிவு செய்துவிட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நிதி நிறுவன ஊழியர்கள் செந்தில்நாதனை மிரட்டி பாதி வழியிலேயே இறக்கிவிட்டு டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதனால் மனமுடைந்த செந்தில்நாதன், நடந்த விவரத்தை தனது மனைவிக்கு கடிதமாக எழுதி வைத்துவிட்டு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த செந்தில்நாதனை அவரது குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications