கல்வி அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்.. பரபரப்பு வீடியோ
பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பல முறை கோரிக்கை வைத்தும், அதனை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மாணவிகள் வாகனத்தை சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹ்னார் பிளாக்கில் உள்ள அரசு பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மதன் சௌக் மற்றும் படேல் சௌக் இடையே மஹ்னார் என்ற ஊரில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பிரச்சனையில், அரசுப் பள்ளி மாணவிகள் கல்வித் துறை ஆய்வாளரின் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள்.
கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் கல்லை விட்டு எறிந்து அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தாக்கியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்வி அதிகாரியின் காரை கடுமையாக தாக்கினர். கையில் கிடைத்த கற்கள், பலகை, என சிக்கிய அத்தனையையும் எடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். மாணவிகளின் இந்த அதிரடி தாக்குதலால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது.. இதனிடையே மாணவியை தாக்கிய பெண் போலீஸ் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"म्हारी छोरियां छोरों से कम है के"
— Mukesh singh (@Mukesh_Journo) September 12, 2023
ये दृश्य वैशाली के महनार ज़िले का है,जब छात्रा स्कूल में मूलभूत सुविधा नहीं होने की वजह से दुर्गा रूप में आ गयी .!
बीडीओ से लेकर पुलिस वाले तक कोई नहीं बच पाये.! #Bihar pic.twitter.com/7afh7G6nNE
எதற்காக மறியல் செய்தார்கள்:மாணவிகள் படிக்கும் அரசு பள்ளியில், வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்துள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் இருந்துள்ளது. இதனால் உட்கார இடமில்லாத மாணவர்கள் தான் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இரண்டு ஷிப்டுகளாக பள்ளியை நடத்த முயற்சி செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்திகளின், வகுப்பறையில் உட்காருவதற்கு கூட இட வசதி இல்லாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்துள்னர். இதையடுத்து போலீசார், போராட்டம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அதிகாரிகள் பள்ளி மாணவிகளை அறைந்தார்களாம். அதைத் தொடர்ந்து மாணவிகள் கல்வி அதிகாரியின் காரை மொத்தமாக அடித்து நொறுக்கி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications