TVK Vijay: ஏன் சனிக்கிழமையில் பிரச்சாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே.. விஜய் நச் பதில்
நாகை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாவது வாரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாகை புத்தூர் அண்ணா சாலை பகுதியில் விஜய் பேசினார். அப்போது, சனிக்கிழமைகளில் பிரச்சார பரப்புரை மேற்கொள்வது தொடர்பான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் பிரச்சாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளார். 20க்கும் மேற்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் காவல் துறை இந்தப் பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளித்திருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்க்கு சாலை மார்க்கமாக நாகை சென்றார்.

விஜய்க்கு உற்சாக வரவேற்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புத்தூர் பகுதியில் பிரச்சார உறையை தொடங்கினார். அவர் பேசுகையில், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசி பெற்ற மண் நாகை எனது மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
நாகைக்கான திட்டங்கள்
மீன் ஏற்றுமதியில் நாகை மாவட்டம் 2 ஆவது இடம். மீனவ நண்பனாக வந்துள்ளேன். மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்திற்கு ஏதேனும் திட்டங்களை திமுக கொண்டு வந்ததா? இதனைவிடவும் இந்த அரசுக்கு வேறு ஒரு வேலை இருக்கு.. அது என்ன தெரியுமா? சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் அந்த முக்கியமான வேலை.. இங்குள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்க
கடல் சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வரலாம்? கொண்டு வந்தார்களா? வேலைவாய்ப்புக்காக தொழில் வளர்த்தையாவது பெருக்கினார்களா? ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு பயணம் சென்று வரும் போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு.. அத்தனை கோடி முதலீடு என்று முதல்வர் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே சொல்வாரே.. சிஎம் சார்.. மனதை தொட்டு சொல்லுங்கள்.
பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு
கடந்த வாரம் பெரம்பலூர் சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்ல முடியாமல் போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாம் இந்தப் பிரச்சாரத்திற்கான திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என்கிற விமர்சனமும், கேள்வி எழுந்தது.
சனிக்கிழமை பிரச்சாரம்
உங்களுடைய எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாட்களில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. அரசியிலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் ஓய்வு நாள்களாகப் பார்த்து திட்டமிடப்பட்டது. உங்களை, நமது சொந்தங்களை சந்திக்க எத்தனை காரணங்கள்.
எத்தனைக் கட்டுப்பாடுகள்
அங்கு அனுமதியில்லை, இங்க அனுமதியில்லை என எத்தனைக் கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள். அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது என எத்தனை கட்டுப்பாடுகள். 5 நிமிடம்தான் பேச வேண்டும், 10 நிமிடம்தான் பேச வேண்டும் என எத்தனை கட்டுப்பாடு, நான் பேசுவதே 3 நிமிடம்தான், அதிலும் இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு என விதிக்கிறார்கள் என்று கூறினார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications