ஒரே நேரத்தில் தாய், மகள், மருமகளுடன் ஆபாச சாட்டிங்.. என்ன பேசினார்? தயங்காமல் பெனடிக்ட் ஆன்றோ பதில்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஒரே நேரத்தில் தாய், மகள், மருமகளுடன் ஆபாச சாட்டிங்
நாகர்கோவில்: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஒரே நேரத்தில் தாய், மகள், மருமகளுடன் ஆபாச சாட்டிங் நடத்தியதாக வாக்குமூலத்தில் பகீர் தகவல் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ (29). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆபாச சாட்டிங்
பெண்களுடன் புகைப்படம் ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகி பகீர் கிளப்பின. மேலும் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடி முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

வைரலான வீடியோ
இந்த நிலையில் இந்த சம்பவம் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் செய்து தொல்லை கொடுப்பதாகவும் தனது ஆசைக்கு பணியுமாறும் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

ஆன்றோ மீது வழக்குப் பதிவு
இதையடுத்து பாதிரியாரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தலைமறைவாக உள்ள பாதிரியாரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் பாதிரியாரின் லேப்டாப்பை பார்த்த போது சென்னையை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இதை பார்த்து போலீஸாரே அதிர்ந்தனர்.

பெனடிக்ட்
மேலும் பாதிரியாரால் எந்த பெண்ணாவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றும் அவ்வாறு புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவவித்துள்ளனர். தன்னை பற்றிய வீடியோக்கள் வைரலானதை அடுத்து பெங்களூர், கேரளாவில் பதுங்கி இருந்து போக்கு காட்டி வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

13 சிம் கார்டுகள்
இவர் 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இவர் அத்தனை சிம்கார்டுகளை பெற உதவியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆன்றோ அளித்த வாக்குமூலத்தில் பெண்களாகவே என்னிடம் பழகினார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை. ஒரே குடும்பத்தில் தாய், மகள், மருமகள் ஆகிய மூவருடன் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்டேன் என்றார்.

15 நிமிடங்களுக்கு விசாரணை
அது குறித்து எந்த வித தயக்கமும் இல்லாமல் பெனடிக்ட் பதில் அளித்தார். சுமார் 15 நிமிடங்களுக்கு இந்த விசாரணை நடத்தப்பட்டது. பாதிரியாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நெருக்கமான புகைப்படங்கள், வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications