சிகிச்சை அளித்த டாக்டரிடமே சில்மிஷம்! நள்ளிரவில் ஆபாச மெசேஜ்.. நாகர்கோவில் பாஜக பிரமுகர் அதிரடி கைது
நாகர்கோவில்: சிகிச்சைக்கு சென்ற இடத்தில் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். பல்வேறு கட்சிகளில் இருந்த வந்த இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். சமீப காலமாகவே இவர் அப்பகுதியில் பாஜக பிரமுகராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்கோளாறு காரணமாக நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தொடர் சிகிச்சை என்பதால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறார்.

அப்போது இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் செல்போன் எண்ணை கேட்டு பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் மருத்துவ தேவைக்காக அழைத்த அவர், பின் நாட்களில் அடிக்கடி தேவையில்லாமல் அழைத்திருக்கிறார். போன் எடுக்காத நேரத்தில் மருத்துவமனைக்கு நேரிலேயே வந்து தொந்தரவு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இந்த தொல்லையை மருத்துவர் சகித்துக்கொண்டிருக்க, ஒருநாள் இது பாலியல் தொல்லையாக உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்த பாலியல் தொல்லையை சகித்துக்கொள்ள முடியாத மருத்துவர், இதிலிருந்து விலக முயன்றிருக்கிறார். ஆனாலும், ஜெயக்குமார் விடாமல் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் மருத்தவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மட்டுமல்லாது அவரை உடனடியாக கைதும் செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் இவர் ஈடுபட்டிருக்கிறார். இதுபோன்று ஏராளமான மோசடி குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கின்றன. சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது ஏற்கெனவே இருக்கின்றன. இது எல்லாவற்றையும் விட ஹைலைட் என்னவெனில், இவர் கடந்த 2022ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான்.
நீண்ட நாட்களாக சிறையிலிருந்த அவர், வெளியே வந்து பாஜகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications