விருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு
Recommended Video
நாகர்கோவில்: மத்திய அரசு இந்தியை திணிக்க கூடாது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி எச். வசந்தகுமார் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் வரும் பொதுத் தேர்தலிலும் தோற்று விடுவோம் என்பதால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது என்றும் எச். வசந்தகுமார் குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சுமார் 11 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
எச். வசந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில்வே துறையை நம்பி 13 லட்சம் குடும்பங்கள் வாழுகின்றன. எனவே ஒருபோதும் ரயில்வே துறையை தனியார் மயம் ஆக்க கூடாது.
பள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு!
குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. 15 நாட்களுக்குள் இந்த சாலைகளை செப்பனிட டெண்டர் விட்டு பணிகள் துவங்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம் பின்பு மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
மத்திய அரசு இந்தியை திணிக்கிறார்கள். இதனை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தியை திணிக்கத்தான் கூடாது படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் வெற்றி கிடைக்குமா என்ற பயத்தில் அவர்கள் உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் தோற்றுவிட்டால் அடுத்து ஆட்சியில் வர முடியாது என்ற நினைப்பில் உள்ளார்கள் என்றும் கூறினார்.