"அபார்ஷன்" செய்ய வேண்டும் என்று சொன்ன அமைச்சருக்கு கமல்ஹாசன் பதிலடி!
Recommended Video

நாகர்கோவில்: கமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய பேச்சுக்கு கமல்ஹாசன் உரிய பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர் கூறுகையில் எம்ஜிஆர் மக்களோடு இருந்து மாளிகை கண்டவர். ஆனால் கமல்ஹாசனோ மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர்.

தமிழகத்தை காக்க ரட்சகர் போல் கமல்ஹாசன் நாடகம் நடத்துகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்துக்கு பெரிய ஆபத்து.
வெளிநாட்டு தீயசக்தியோடு கமல் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மீது ஏற்படுகிறது என்றார் அமைச்சர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கமல்ஹாசன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலிடம் அமைச்சர் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீயசக்தி. கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லவில்லை என்றார் கமல்.












Click it and Unblock the Notifications