தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கம்.. சிஐடியு புகார்
நாகர்கோவில்: தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலைமை படுமோசமாக உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது இயக்கப்படும் அரசு பேருந்துகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காலாவதியான நிலையில் தான் இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாகவே வடபழனியில் விபத்து ஏற்பட்டு இரு அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்துகளுக்கு போதிய உதிரி பாகங்கள் இல்லை. தொழிலாளர்களின் கடின உழைப்பால் தான் அரசு பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன.
கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து தொழிலதாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பேசிய சவுந்தர்ராஜன் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணம் ரூ.8 ஆயிரம் கோடியை எடுத்து, பிற துறைகளுக்கு அரசு செலவழித்து வருகிறது.
ஆனால் போக்குவரத்து துறையோ தள்ளாட்டத்தில் உள்ளது. எனவே போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் . எனினும் இந்த முக்கிய கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதே போல அரசு பேருந்துகளை பராமரிக்க போதிய உதிரிபாகங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசின் முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, மாநிலம் முழுவதும் நலவாரியங்கள் அலுவலகங்கள் முன்பு வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பலன்களுக்கன விண்ணப்பங்கள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் தொழில்களில் சுமார் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தொழிலாளர்களை பாதுகாக்க அரசு உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications