சிரிப்பு ஆஹா சிரிப்பு.. மறக்க முடியாத என்எஸ்கே.. நினைவு கூர்ந்த நாகர்கோவில்
Recommended Video
நாகர்கோவில்: கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 62 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி கிராமத்தில் பிறந்து தனது நடிப்பாற்றலால் பொதுமக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சுதந்திர உணர்வை ஊட்டியவர் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்.

நகைச்சுவை கலை திறனால் உலக மக்களை மட்டும் அல்லாது பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த கலைவாணர் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி உலகை விட்டு பிரிந்தார். இந்த பிரிவு அந்த நாளில் கலைதுறைக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கே பேரிழப்பாக கருதப்பட்டது.
கலைவாணரின் கலை திறனை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்து வளர்ந்த நாகர்கோவிலில் அப்போதைய தமிழக முதல்வர் புரட்சி கலைவர் எம்ஜிஆர் தனது சொந்த நிதியில் சிலை அமைத்து அழகு பார்த்தார். இந்நிலையில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அதன் படி நாகர்கோவிலில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்த குமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் அதிமுக கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலைவாணர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications