Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகர்கோவில் மசாஜ் பண்ண 500, விருந்துக்கு 5000.. குடும்ப பெண்களை வைத்து விபச்சாரம்.. திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாகவும், ரூ.500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் அடுத்துடுத்து 2 மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதை போலீசார் கண்டுபிடித்து புரோக்கர்களை கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் சிலர் வாடகை வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசார தொழில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது . இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதன், விபசார தொழிலை தடுக்கவும், இதில் ஈடுபடும் புரோக்கர்களை கைது செய்யதிடவும் உத்தரவிட்டார்.
What is domestic women prostitution? How did it increase in nagarkovil?

இதன்படி நாகர்கோவில், தக்கலை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து சென்றுள்ளார்கள்.. சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பித்தால் போதும் தாவி குதித்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றும் லாவகமாக தப்பினார்கள். இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபசார தொழிலில் பெண் புரோக்கர்கள் தான் அதிக அளவு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த புரோக்கர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏழை, எளிய பெண்களை அழைத்து வந்து, நல்ல சம்பளத்துடன் வீட்டு மற்றும் கடை வேலைக்கு சேர்த்துவிடுகிறார்களாம்.

பின்னர், அழைத்து வரப்பட்ட பெண்களை, அவர்களின் வறுமையை காரணம் பணத்தாசையை தூண்டி விபசார தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள். இதில் வெளியூர் பெண்கள் மட்டுமின்றி உள்ளூர் இளம்பெண்களும் ஈடுபடுகிறார்களாம். மேலும், விபசார தொழில் ஈடுபடுவது பெரும்பாலானோர் திருமணமான குடும்ப பெண்களாக இருப்பதாகவும் வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மசாஜ் சென்டர்களை பொறுத்தவரை அங்கிருக்கும் பெண் புரோக்கர்கள் ஆண்களை பேச்சால் மயக்கி, தனி அறைக்கு அழைத்து செல்வார்களாம். அங்கு இளம்பெண்ணை வைத்து மசாஜ் மட்டும் செய்வதற்கு ரூ.500 கட்டணமும், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமும் புரோக்கர்கள் வசூலிக்கிறார்களாம். இதனிடையே உரிய அனுமதி இல்லாமலும், விதிமுறைகளுக்கு மாறாக இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+