"அதை" நசுக்கும் அளவுக்கு.. பிளே ஸ்கூல் காயத்ரிக்கு அவ்ளோ கோபமா.. "இழப்பை" தாங்க முடியாததால் ஆவேசம்
கணவனின் ஆணுறுப்பை நசுக்கி கொல்ல முயன்ற மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்
நாகர்கோவில்: கள்ளக்காதலனை இழக்க காயத்ரிக்கு மனசே இல்லை.. அதனால் கூலிப்படைவரை சென்று, கணவனை கொலை செய்ய ஐடியா போட்டுள்ளார்.. கூலிப்படையினர் வீட்டுக்குள் நுழைய வசதியாக, கதவை திறந்து வைத்து கொண்டு உட்கார்ந்தும் இருந்திருக்கிறார்.. இப்படி ஒரு பகீர் கிளப்பும் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது.
வெட்டூர்ணிமடம் அருகே கேவச திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்.. இவர் ஒரு போடோகிராபர்.. 31 வயதான மனைவி பெயர் காயத்ரி.. 4 வயசில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 5 நாளைக்கு முன்பு நைட் ரேம் கணேஷ் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

கத்தி
அவரது தலையில் கத்தியால் வெட்டிவிட்டு, ஆணுறுப்பையும் நசுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.. அப்போது கணேஷ் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து திரண்டு வந்து கணேஷை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு மண்டை ஓடு பிளந்து கிடந்தது.. அதனால் உடனடியாக 3 நேரம் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டு, தற்போதும் ஐசிவியூவில்தான் உள்ளார்.

காயத்ரி
ஆனால், கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று காயத்ரி சொன்னாலும், மண்டை எப்படி உடையும், ஆணுறுப்பு எப்படி நசுக்கப்பட்டிருக்கும் என்று உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால் காயத்ரி மீது கணேஷின் தம்பி வடசேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில்தான் விசாரணை ஆரம்பமானது.

கல்யாணம்
அப்போது காயத்ரி பற்றின பல திடுக் தகவல்களும் வெளியாயின.. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பிளே ஸ்கூலில் காயத்ரி டீச்சராக வேலை பார்த்து வந்திருக்கிறார். மதுரையை சேர்ந்தவர் காயத்ரி.. கல்யாணத்துக்கு முன்பே யாசின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. ஆனால் காயத்ரி வீட்டில் இந்த காதலை ஏற்கவில்லை.. அதனால் உடனடியாக மாப்பிள்ளை பார்த்து கணேஷை கட்டி வைத்துவிட்டனர்.. இருந்தாலும் காயத்ரி யாசினுடன் தொடர்பிலேயே இருந்தார்.

வீட்டு பத்திரம்
ஒருகட்டத்தில் தன்னுடன் எப்பவுமே காயத்ரி இருக்க வேண்டும் என்று யாசின் விரும்பினார்.. அதற்காகவே காயத்ரி வசிக்கும் பகுதியில் ஒரு ப்ளே ஸ்கூல் தொடங்கி ஐடியா போட்டார்.. ஆனால் அதற்கு போதுமான காசு இல்லை.. இதை பார்த்த காயத்ரி, கணேஷ் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை தனது அண்ணனுக்கு வேண்டும் என்று சொல்லி எடுத்து கொண்டார்.

கள்ளக்காதல்
அதை அடமானமாக வைத்து யாசினுக்கு தந்து 10 லட்சம் ரூபாய் புரட்டி தந்துள்ளார்.. ப்ளே ஸ்கூலும் ஆரம்பிக்கப்பட்டது. காயத்ரியை டீச்சராக உட்கார வைத்துவிட்டார் யாசின். இப்போது 2 பேருமே ஜாலியாக சுதந்திரமாக ஊர் சுற்றினார்கள்.. இந்நிலையில், ஒருநாள், தன் வீட்டு பத்திரம் குறித்து காயத்ரி அண்ணனிடம் கணேஷ் கேட்க முயன்றார்.. ஆனால் தன் அண்ணனிடம் பேச விடாமல் தடுத்து கொண்டே இருந்தார் காயத்ரி. இது கணேஷூக்கு சந்தேகத்தை தந்தது.

பின்பக்க கதவு
இப்படிப்பட்ட சமயத்தில்தான் கணவனை கொன்றுவிடுவது என்று காயத்ரி முடிவு செய்தார்.. இதற்காக ஒரு கூலிப்படைக்கு 2 லட்சம் தந்து அழைத்து வந்தனர். சம்பவத்தன்று கணேஷ் தூங்கிய நேரம், யாசினுக்கு காயத்ரி தகவல் சொல்ல, அவர் கூலிப்படையை உள்ளே அனுப்பியிருக்கிறார். அதற்குள் காயத்ரி பின்புற கதவை திறந்து வைத்துவிட்டு எதுவுமே தெரியாததுபோல் படுத்து கொண்டார்.

விசாரணை
இதற்கு பிறகுதான் கூலிப்படையினர் கணேஷின் மண்டையை பிளந்துள்ளனர்.. இன்னொரு பெண்ணுடன் தவறான உறவு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதுபோல, ஆணுறுப்பையும் நசுக்கிவிட்டு சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.. இப்போதைக்கு அந்த கூலிப்படையினர் 2 பேர், மற்றும் காயத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.. யாசினை தேடி வருகிறார்கள்.. இது சம்பந்தமாக தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications