மாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பேச்சிபாறை அடுத்த ஆலம்பரை வசித்து வருபவர் சேர்ந்த அங்கன்வாடி பணியாளராக இருந்த சீதா கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் என்பவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாலும் ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளார்.

பல முறை இது குறித்து பல புகார் அளித்த பின்னரும் அது தொடர்பாக காவல் துறையினை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனமுடைந்த அவர் மனு நீதி நாளான இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் தன கையில் கொண்டு வந்த பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மணெண்ணெய் உடலில் ஊற்றிய பெண் தீக்குளிக்க முயன்றார்.
அதனை கண்ட பொது மக்கள் அவரை தடுத்து நிறுத்தி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு சிகிச்சைகாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
பாலியல் துன்புறுத்துதலுக்கு பயந்து பெண் ஒருவர் வாழ முடியாமல் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை எற்படுதியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!