நல்ல போதை.. மயங்கி விழுந்த பெண்.. மறைவிடத்திற்கு கூட்டிகொண்டு போய் .. வக்கிர வாலிபருக்கு தர்ம அடி
பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
நாகர்கோவில்: மயங்கி விழுந்த பெண்ணை மறைவாக இழுத்து சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டேண்டில் நேற்றிரவு வழக்கம்போல பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு 35 வயதுடைய ஒரு பெண், நீண்ட நேரமாக பஸ் ஸ்டேண்டில் சுற்றிக் கொண்டே இருந்தார்.

இதை ஒரு இளைஞர் பார்த்துவிட்டு, அந்த பெண்ணையோ நோட்டமிட்டு கொண்டிருந்தார். பெண் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருப்பதையும், அதை இளைஞர் பார்த்து கொண்டே இருப்பதையும் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கவனித்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், அந்த பெண் திடீரென பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்துவிட்டார். உடனே அந்த இளைஞர் ஓடிச்சென்று பெண்ணை மறைவான பகுதிக்கு இழுத்து சென்றார்.
இதை பார்த்த மக்கள், வேகமாக அந்த இளைஞர் இருக்குமிடத்துக்கு விரைந்தனர். அங்கே மயங்கி விழுந்த பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட முயன்ற இளைஞரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து வடசேரி போலீசில் ஒப்படைத்தனர்.
இதனிடையே பெண்ணின் கணவர், பஸ் ஸ்டேண்டுக்கு தேடி வந்துவிட்டார். மயங்கிய நிலையில் மனைவி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் தெரிந்தது, மனைவி குடிபோதையில் இருந்துள்ளார் என்று! பின்னர், ஒரு ஆட்டோவில் மனைவியை ஏற்றி கொண்டு அவர் கிளம்பி சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications