நாமக்கல் தேவி வீட்டில் முடிவுக்கு வந்த நல்ல நேரம்... கிராம நிர்வாக அலுவலருக்கு தேடி வந்த வில்லங்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த புதுப்புளியம்பட்டி பகுதி பனைமரங்கள் வெட்டியதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் உதவியாளர் மற்றும் கணவரும் இந்த லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டில் சென்று நடந்த லஞ்சப்பொறியில் மொத்தமாக சிக்கியுள்ளார்கள்.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.ஆனால் எதார்த்தத்தில் பலர் 3 நாளில் முடிய வேண்டிய வேலையை ஒரே நாளில் முடிக்க வற்புறுத்தி லஞ்சம் வாங்குகிறார்கள். அந்த பழக்கமே லஞ்சம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் பழகிய சில அரசு ஊழியர்கள், லஞ்சம் கொடுப்பவர்களின் பணிகளுக்கு முக்கியத்துவம் தருவதால், லஞ்சம் தராதவர்களின் பணிகள் கிடப்பில் போடப்படுகிறது.

இதனால் அலைச்சலுக்கு பயந்து அவர்களும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.. சில அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தால் பைல் நகரும் என்று மிரட்டுகிறார்கள். சிலர் லஞ்சம் வாங்க வேண்டும் என்பதற்காவே அலையவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பனைமரங்கள் வெட்டியதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் விஏஓ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பனை மரங்களை வெட்டக்கூடாது என்பது விதியாகும். ஆனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த புதுப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் (வயது 40). இவா் தனது நிலத்தில் இருந்த 6 பனை மரங்களை வெட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க புதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், ரூ.40 ஆயிரம் லஞ்சம் செந்தில்குமாரிடம் கேட்டாராம்
இதையடுத்து விவசாயி முதல் கட்டமாக ரூ.20 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணம் கொடுக்க முடியாமல் செந்தில்குமார் தடுமாறிய போது கட்டாயப்படுத்தி குணசேகரன் கேட்டு மிரட்டினாராம், இதனால் செந்தில்குமார் நடந்தவற்றை கூறி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை செந்தில்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கொடுக்க அவர் நேற்று கிராம நிர்வாக அலுவலரை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அப்போது குணசேகரன் தான் வெளியில் இருப்பதாகவும், கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டில் சென்று கொடுத்து விடும்படியும் கூறினாராம். இதையடுத்து செந்தில்குமார், கிராம உதவியாளர் தேவி வீட்டுக்கு லஞ்ச பணத்தை கொடுக்க சென்றார். அங்கு தேவியின் கணவர் விஜயகுமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும், தேவியையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் (53), கிராம உதவியாளர் தேவி (39), அவரது கணவர் விஜயகுமார் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications