ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்!
நாமக்கல்: ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 73 வயதாகும் பி.ஆர்.சுந்தரம், அதிமுகவில் இருந்த போது 2 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 73 வயதாகும் அவர், அதிமுகவில் நீண்ட காலம் பயணித்தவர். 1996 முதல் 2001 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் இராசிபுரம் தொகுதி எம்எல்ஏ-வாக செயல்பட்டவர்.

இதனைத் தொடர்ந்து 2014 முதல் 2019 வரை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் உடன் பிரிந்த பி.ஆர்.சுந்தரம், கடைசி காலத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த அவருக்கு திமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். உடல்நலக் குறைவால் கட்சிப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பி.ஆர்.சுந்தரம் காலமானதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஆர் சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications