தமிழ்நாட்டில் தினசரியும் 68ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை... 6 ஆயிரம் பேர் பாதிப்பு - முதல்வர்
கொரோனா தொற்றால் உலகளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நாமக்கல்: தமிழ்நாட்டில் தினமும் 68,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனை காரணமாக, கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய நாமக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.137.65 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 26 புதிய திட்டங்களை முதல்வர் தொடக்கி வைத்தார். 19,132 பேருக்கான ரூ.91.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் பழனிச்சாமி. ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்வதாக கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாமக்கலில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. திருச்செங்கோடு-ராசிபுரம் சாலை விர்வாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் சேந்தமங்கலத்தில் கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியில் 1,052 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
கொரோனா தொற்றால் உலகளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தினமும் 68,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்படுவதாக ரிசல்ட் வெளியாகி வருகிறது.
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அதிக பரிசோதனை மேற்கொள்வதன் காரணமாக, கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications