Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் சினேகா.. கொடிய கோகிலாவால் "மிதந்த" பூவரசி.. குன்றத்தூர் அபிராமியை ஞாபகம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் சினேகா செய்த காரியம், ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரமாக நடத்தி வருகிறார்கள். சினேகாவுடன் கைதான கோகிலா யார்?

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவருடைய மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

namakkal kundrathur abirami

தம்பதி: ஆனால், திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.. அதனால், கடந்த 3 வருடங்களாகவே, இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள்... முத்தையாவை போலவே, சினேகாவும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

அப்போதுதான், வேலை செய்யும் இடத்தில், சரத் என்பவர் அறிமுகமானார்.. இவருடனான உறவு, கள்ளக்காதலாக மாறியது.. எனவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. இந்த விவகாரம் சினேகாவின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.. எனவே, சினேகாவை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு, இப்படி தவறான உறவில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

குழந்தை: இதனால், சினேகாவின் கோபம் முழுக்க , தன்னுடைய குழந்தையின் பக்கம் திரும்பியது.. எனவே, குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சினேகா, இதற்காக தன்னுடைய பெரியப்பா மகள் கோகிலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்டார்.

சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு போய், அந்த பகுதியிலிருந்த தோட்டத்தில் கிணற்றில் வீசியெறிந்துவிட்டனர்.. இதில் குழந்தை கிணற்றிலேயே மூழ்கி இறந்துவிட்டது.. மறுநாள் கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்ததைகண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..

தேடுதல் வேட்டை: தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியபோதுதான், சினேகா மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு தப்பியோடிய சினேகா, கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.. கடந்த 2018-ல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குன்றத்தூர் அபிராமி சம்பவம். தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி. இது தொடர்பான வழக்கு நடந்து முடிந்துள்ள நிலையில், அபிராமி மீது குற்றமும் நிரூபணமாகி விட்டது. ஆனால், இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை.

பிஞ்சு குழந்தைகள்: உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் இன்னமும் அடங்குவதில்லை...

அபிராமி போன்றோருக்கெல்லாம் தண்டனையும் தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+