நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பலி.. பூஜை செய்தபோது கீழே விழுந்ததால் பரிதாபம்!
Recommended Video

நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்த அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் உள்ள அனுமார் கோயில் வெகு பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் மூலவர் சிலை 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அசாதாரண சம்பவம் நடந்துவிட்டது. அர்ச்சகர் வெங்கடேஷ் என்பவர், பூஜை செய்தபோது, பக்தர் ஒருவர் துளசியால் உருவான மாலையை கொண்டுவந்து வெங்கடேசிடம் கொடுத்துள்ளார்.

நிலை தடுமாற்றம்
அந்த துளசி மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்க முயன்றபோது, வெங்கடேஷ் எதிர்பாராதவிதமாக, திடீரென நிலைதடுமாறி 8 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

பலி
இந்த சம்பவத்தில், வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை வெங்கடேஷ் உயிரிழந்தார்.

கோவில் வரலாறு
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. நரசிம்மர் ஆலையம் அருகே 22 அடி உயரத்தில் கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்கு கோபுரம் இல்லை என்பதால், தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக கோயில் வரலாறு கூறுகின்றது.

ஏணி அமைப்பு
ஆஞ்சநேயர் சிலை என்பது, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாகும். ஆஞ்சநேயர் சிலைக்கு, அபிஷேகம், மாலை ஆகியவை அணிவிக்க ஏதுவாக, 8 அடி உயரமுள்ள ஏணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்றபடிதான், வெங்கடேஷ் பூஜை செய்ததாகவும், அப்போதுதான் தடுமாறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications