கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி.. தூக்கி வீசப்பட்ட மாணவிகள்.. பரபர சிசிடிவி காட்சி!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளானபோது, பேருந்தில் இருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வலைதளத்தில் பரவி வருகிறது.
Recommended Video
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செம்மண்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரபாகரன், ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக நாரைகிணறு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது முள்ளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி ஒன்று, கல்லூரி பேருந்தின் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால், லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் அன்பழகன் இடது புறமாக திரும்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 5 ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது நேராக பேருந்து மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், கல்லூரி பேருந்தில் பயணம் செய்த இரண்டு கல்லூரி மாணவிகள் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி போலீசார், காயமடைந்த கல்லூரி மாணவிகளை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குறுகிய சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பியதால் விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் மற்றும் கவனக்குறைவாக கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications