15 சீட்டும், 1000 கோடி பணமும் தருவதாக சொல்லி கூப்பிட்டாங்க.. நான் என்ன சொன்னேன் தெரியுமா?: சீமான்
நாமக்கல்: 15 சீட் தருவதாகவும், 1,000 கோடி பணம் தருவதாகவும் கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள், ஆனால் நான் போகவில்லை எனக் கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மைக் சின்னத்திற்கு ஆதரவாக தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார் சீமான். நேற்று நாமக்கல் லோக்சபா தொகுதி நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான்.

அப்போது சீமான் பேசுகையில், "தொடர்ந்து அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட்டு எங்களை ரோட்டுல போட்டதுதான் மிச்சம். மக்கள் மீதான அக்கறையில்தான் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பரப்புரை செய்கிறோம். 15 ஆண்டுகாலமாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்? கவுன்சிலர், ஒரு எம்.எல்.ஏ, எம்.பி? ஒரு இழவும் கொடுக்கவில்லை.
ஆனால் இதையெல்லாம் கொடுக்கிறேன் என கூட்டணிக்கு அழைத்தார்கள். 15 சீட், 2026-ல் நீங்கள்தான் முதலமைச்சர், 1,000 கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்லி கூப்பிட்டார்கள். குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில் கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன்" எனப் பேசியுள்ளார் சீமான்.
மேலும் சீமான் பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம். கை சின்னத்தில் காங்கிரஸ், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுகிறது.
பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை மட்டும் எடுத்துக் கொண்டனர். ஏன் எடுத்தனர்? பயம். அந்த சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக் கூடாது என்ற பயம்.
பாஜக முதலில் இங்கு தேர்தல் நடத்த காரணம், எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். திரும்ப திரும்ப மோடி ஓடி ஓடி வருகிறார். ஏன்? எப்படியாவது அந்த வாக்கு இயந்திரத்துக்குள் வேலையைக் காட்டி பாஜக வென்று விட்டதாக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்" எனக் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications