Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவர்புல் தமிழர்கள்! அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில்.. கலந்து கொண்ட 4 வலிமைமிக்க தமிழர்கள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட 4 சக்தி வாய்ந்த தமிழர்கள் கவனம் பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்தியா சார்பாக முகேஷ் அம்பானி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் மொத்தமாக 4 தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

தமிழர் 1 - அமைச்சர் ஜெய்சங்கர்:

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, ​​அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்க்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடி சார்பாக கடிதம் ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பர்சனலாக மோடி எழுதிய கடிதம் இது என்று கூறப்படுகிறது.

தமிழர் 2 - கமலா ஹாரிஸ்

தற்போது துணை அதிபராக உள்ள.. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த கமலா ஹாரிஸ் தமிழர். இவரும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். கமலா ஹாரிஸ் இந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 73,237,314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இன்னொரு பக்கம் டிரம்ப் 76,133,250 வாக்குகள் பெற்றுது குறிப்பிடத்தக்கது. துணை அதிபர் என்ற முறையில் கமலா இன்று பதவி ஏற்பிற்கு செல்கிறார்.

தமிழர் 3: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இன்று நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

தமிழர் 4: விவேக் ராமசாமி கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழ் பின்புலத்தை கொண்டவர் . இவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்று அறிவித்தார். ஆனால் அரசாங்கத் திறன் துறையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒஹையோ கவர்னராக பொறுப்பேற்க விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த தேர்தலில் நிற்க உள்ளார். இதையடுத்தே DOGE குழு தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு கட்டணம்:

இந்த நிகழ்விற்காக 2,50,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்க அரசு வட்டார அறிக்கையின்படி, ஐந்து விதமான டிக்கெட் பேக்கேஜ்கள் வெளியிடப்பட்டு உள்ளன. $1 மில்லியன், $500,000, $250,000, $100,000 அல்லது $50,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த டிக்கெட்டுகளை காசிற்கு விற்பனை செய்யப்படாமல்.. டொனேஷன் என்ற அடிப்படையில் வழங்கப்படும். அதாவது டிரம்ப் அதிபர் தேர்தல் விவகாரங்களுக்கான டொனேஷன் என்ற அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது 8 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+