அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வீட்டில் எப்பிஐ அதிரடி சோதனை- 13 மணிநேர ரெய்டில் சிக்கிய 6 ரகசிய ஆவணங்கள்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஜோ பிடன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பிடன், 2009-2016-ல் அந்நாட்டின் துணை அதிபராகவும் இருந்தார். அப்போதைய அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் பல முக்கிய ஆவணங்களை துணை அதிபராக இருந்த நிலையில் தமது வீட்டில் ஜோ பிடன் பதுக்கி வைத்தார் என்பது புகார்.

உக்ரைன், சீனா, ஈரான் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் மிக முக்கியமான ஆவணங்களைத்தான் ஜோ பிடன் தமது வீட்டில் பதுக்கினார் என கூறப்பட்டது. ஈரானின் ஏவுகணை திட்டம், சீனாவின் உளவுத்துறை கட்டமைப்பு தொடர்பானவையாம் இந்த ஆவணங்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது அமெரிக்கா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிபர் ஜோ பிடனின் வீட்டிலேயே நுழைந்து அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை சுமார் 13 மணிநேரம் நடைபெற்றது. எப்.பி.ஐ.-ன் இந்த சோதனையின் முடிவில் 6 முக்கியமான ரகசிய ஆவணங்கள், ஜோ பிடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோ பிடன், ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதில் எந்த ஒரு வருத்தமும் எனக்கு இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications