காரில் எட்டிப்பார்த்து மிரண்ட அம்மா.. தகாத உறவால் ஷாக்.. அந்த சயின்ஸ் டீச்சரின் பேச்சை பாருங்களேன்
நியூயார்க்: கையும் களவுமாக கசமுசாவில் சிக்கிய இளைஞரை, போலீசார் தற்போது ஜாமீனில் விடுவித்திருக்கிறார்.. என்ன நடந்தது?
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாடு தழுவிய விடுமுறை, அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.. இந்த விடுமுறைகளில்தான், மாணவ, மாணவிகளின் குற்றங்கள் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

அப்படித்தான், இந்த விடுமுறையின்போதும், இந்த சம்பவம் நடந்துள்ளது.. மாணவருடன் சேர்ந்து டீச்சரும் சிக்கிக்கொண்டதுதான், அதிர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் வசித்து வருகிறார் கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட் என்ற டீச்சர்.. 26 வயதாகிறது.. தெற்கு மெக்லென்பர்க் பள்ளியில், சயின்ஸ் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு மாணவர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.. ஆனால், அந்த மாணவர் வேறு பள்ளியில் படித்து வருகிறார்.. 18 வயதுகூட அவருக்கு நிரம்பவில்லை.
ரக்பி விளையாட்டு: ஸ்கூல் முடித்துவிட்டு, சாயங்கால நேரங்களில் ரக்பி விளையாட்டு பிராக்டீஸ் செய்து வருகிறார்.. ஆனால், சமீப காலமாகவே, பிராக்டீசுக்கு போகாமல் இருந்திருக்கிறார் மாணவர்.. இதனால், பயிற்சி நிறுவனத்திலிருந்து, மாணவரின் தாய்க்கு போனை போட்டு, என்ன நடந்தது? ஏன் உங்கள் மகன் இப்போதெல்லாம் கிளாசுக்கு வருவதில்லை என்று கேட்டிருக்கிறார்கள்.
இதைக்கேட்டு பதறிப்போன தாய், மகனிடம் விசாரித்திருக்கிறார்.. ஆனால் மகனோ, அதற்கு சரியாக பதில் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார். அத்துடன், அவரது நடவடிக்கையிலும் மாற்றம் தென்பட்டதால், மகனை கண்காணிக்க துவங்கினார் அம்மா.. அதனால், மகன் எங்கெங்கே செல்கிறார்? என்பதையும் கவனிக்க முயன்றார்.. அப்போதுதான், 26 வயது டீச்சருடன் மகனுக்கு நெருக்கம் இருப்பது தெரியவந்தது..
புதிய செயலி: எனவே, மகனின் நடவடிக்கையை நோட்டம் போட துவங்கினார்.. அப்போதுதான் மக்களின் பாதுகாக்காக கொண்டுவரப்பட்டிருக்கும் Life360 என்ற ஆப் பற்றி தெரியவந்தது.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை இந்த செயலி மூலம் ஷேர் செய்து கொள்ளலாம்.. குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து, இந்த ஆப்பில் மெசேஜ் வந்துவிடும்.. எனவே, இந்த ஆப்பை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டார் அம்மா.. பிறகு தொடர்ந்து மகனை கண்காணித்தும் வந்தார்.
பயிற்சி மையம்: அப்படித்தான், சம்பவத்தன்று, விளையாட்டு பிராக்டீசுக்கு போவதாக சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்.. ஆனால், பயிற்சி மையத்துக்கு போகாமல், பார்க் ரோட்டில் உள்ள கார்டனுக்குள் நுழைந்தார் மகன்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அம்மாவும், பார்க் ரோட்டில் உள்ள கார்டனுக்கு சென்றார்.. பார்க்கில் கார் ஒன்று தனியாக நிறுத்தப்பட்டிருந்தது.. அந்த காருக்கு உள்ளேஎட்டிப்பார்த்தால், மகனும், அந்த டீச்சரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்..
இதை பார்த்து, அம்மா அதிர்ச்சி அடைந்து, செல்போனில் வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவையும், கார் போட்டோவையும் ஆதாரங்களாக பதிவிட்டு, போலீசுக்கு புகார் அனுப்பி விட்டார். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி, டீச்சரை கைது செய்தனர்.. பிறகு, ஸ்டேஷனுக்கு டீச்சரை அழைத்து சென்று விசாரணையும் நடத்தினார்கள்.
விசாரணை: அப்போதுதான், மாணவருக்கும், டீச்சருக்கும் சில மாதங்களாகவே தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது.. பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த கார் டீச்சருடையது என்றும் உறுதியாகி உள்ளது.. இதே காரில் பலமுறை இருவரும் உறவு கொண்டிருக்கிறார்களாம்.
அதுமட்டுமல்ல, மாணவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று உறவு கொண்டுள்ளார் டீச்சர்.. அதைவிட முக்கியமாக, மாணவரின் வீட்டிற்கே வந்து பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாக, போலீசில் டீச்சர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இவர்களது கள்ள உறவு, 2 பேரின் பள்ளிகளிலுமே ஏற்கனவே அரசல்புரசலாக தெரிந்திருக்கிறது.
கடிதம்: தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில், இப்படி நடந்த சம்பவம் துர்திருஷ்டவசமானது, இந்த சம்பவத்தை, மிக சீரியஸாக தற்போது எடுத்து கொண்டிருக்கிறோம்.. மாணவர்கள் இருவரின் பாதுகாப்புமே பள்ளிக்கு முக்கியம்.. அதனால், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்" என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், டீச்சர் ஜாமீனில் இப்போது வெளியே வந்துவிட்டாராம்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications