வந்தது புது ரிப்போர்ட்.. "பூஸ்டர்" தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
நியூயார்க்: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டால், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
பல்வேறு வடிவங்கள் எடுத்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.. இதுவரை இந்த வைரஸை போக்க எந்த மருத்துவமும் கண்டுபிடிக்கப்படவில்லை...
முறையான சிகிச்சை முறைகள் இல்லாமல், இப்போதைக்கு தடுப்பூசியை மட்டுமே நம்பி உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

2 தடுப்பூசிகள்
2 தடுப்பூசிகள் கட்டாயம் போட்டால்தான், தொற்று தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை உருவானது.. அதன்படியே உலக மக்களும் 2 தடுப்பூசிகளையும் போட்டு வருகின்றனர்.. சில நாடுகளில் 2 தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டுவிட்டது..

இந்தியா
சில நாடுகளில் ஒரு தடுப்பூசி முற்றிலும் போடப்பட்டு விட்டது. மேலும் சில நாடுகளில் 3வது தடுப்பூசி அதாவது பூஸ்டர் டோஸ் போட துவங்கி உள்ளனர்.. இதில் இஸ்ரேலும் ஒன்று.. 2 தடுப்பூசிகள் போடப்பட்டும் அந்த நாட்டில் தொற்று குறையவில்லை.. அதேபோல, உலகிலேயே தொற்று பாதிப்பில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள அமெரிக்காவிலும் 2 தடுப்பூசி செலுத்தியும் தொற்று குறையாததால், பூஸ்டர் தடுப்பூசி பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர்.

புது ஆய்வு
ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பற்றி எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.. இன்னும் 2 தடுப்பூசிகளே பல்வேறு மாநிலங்களில் செலுத்தி முடிக்கப்படவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்ற ஆய்வினை அமெரிக்கா மேற்கொண்டது.. அதன்படியே, அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஒன்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளது...

விளைவுகள்
அந்த அறிக்கையில், "2வது தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே மாதிரியான மிதமான பக்க விளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71 சதவீதம் பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி ஏற்படுகிறது.. 56 சதவீதம் பேர் களைப்பாக உணர்கிறார்கள், 43 சதவீதம் பேருக்கு தலைவலி பாதிப்பு உள்ளது,

செயல்பாடுகள்
28% பேருக்கு தங்களது அன்றாட செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது... இருந்தாலும் அதெல்லாம் மிதமான பக்க விளைவுகள்தான்... இதில் 0.1 சதவீதம் பேர் மட்டுமே பக்கவிளைவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்" என்று அறிக்கையில் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், 21 கோடி பேர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications