இந்தியாவுக்கு அதிகரித்த ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவாதத்தை வாபஸ் பெற்ற சீனா
நியூயார்க்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கைக்கு முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சிலில் தனது கோரிக்கையை சீனா அமைதியாக வாபஸ் பெற்றுக்கொண்டது.
370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலங்கள் பிரிக்கப்பபட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் ஆதரவுடன் ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முறையிட்டது. இதன் காரணமாக அப்போது காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முறையீடு
அதன்பிறகு தற்போது பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.

ஐநாவுக்கு கடிதம்
டிசம்பர் 12 ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி. ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரிப்பதாக கூறி கவலை தெரிவித்தார்.

விளக்கம் கேட்டது
இதேபோல் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் அதிகரிக்கும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக சீனாவும் தெரிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீரின்நிலைமை குறித்து ஐநா சபைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீனா கேட்டிருந்தது.

சீனா வாபஸ்
சீனாவின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக மூடப்பட்ட அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் கோரிக்கைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்தியா அதிரடி
இதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் குறித்து சீனா கோரிக்கை வைத்த போது, இந்தியா தரப்பில், நாங்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை. எனவே விவாதத்திற்கு நாங்கள் வர இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிகாரிகள், இந்தியா பாகிஸ்தான் என இரு தரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தங்கள் நாடு தெளிவாக இருப்பதாக கூறியதுடன், காஷ்மீர் விவகாரம் இங்கு விவாதிக்கப்படாது என்று தெரிவித்தனர். இதனால் சீனா தனது கோரிக்கையை வாபஸ் பெற்றது.












Click it and Unblock the Notifications