உண்மைக்காதல் கொரோனாவையும் ஜெயிக்கும்.. நிரூபித்துக் காட்டிய காதலர்கள்.. ஒரு நெகிழ்ச்சித் தருணம்!
அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா நோயாளி ஒருவர், மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது அமெரிக்காவில் தான். இதனால் அந்நாட்டு மக்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளை தள்ளிவைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் வைத்தே தனது காதலியை கரம்பிடித்த ருசிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
சான் ஆண்டனியோ பகுதியை சேர்ந்தவர் கார்லோஸ் முனிஸ். இவர் கிரேஸ் எனும் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், கார்லோஸ்க்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது.

மருத்துவர்கள் சம்மதம்
இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனால் காதலி கிரேஸ் மிகவும் கவலை அடைந்தார். கர்லோஸை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்த அவர், மருத்துவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.

சமூக இடைவெளி
இதையடுத்து மருத்துவமனையில் வைத்தே கிரேஸ் - கர்லோஸ் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணப்பெண், மணமகன் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், தகுந்த சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டது. உணர்ச்சி பெருங்கடல் சூழல இத்திருமணம் நடைபெற்றது.

காதல் கைவிடவில்லை
கர்லோஸ் மீது கிரேஸ் வைத்திருந்த காதல் வீண்போகவில்லை. திருமணம் நடந்த முடிந்த மறுதினமே கர்லோஸின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்த ஓரிரு வாரங்களில் கொரோனாவின் பிடியில் இருந்து அவர் முழுமையாக விடுபட்டுவிட்டார்.

காதலைக் கொண்டாடுவோம்
கர்லோஸ் குணமடைய அவரது காதல் தான் காரணம் என மருத்தவர்கள் முழுமையாக நம்புகின்றனர். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கர்லோஸ் விரைவில் வீடு திரும்பி, கிரேஸ் உடன் புதிய வாழ்வை தொடங்க இருக்கிறார். கொரோனாவை வென்ற இந்த காதலை நாமும் கொண்டாடுவோம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications