Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேசாம பதுங்கு குழிக்கே போய் படுத்துக்குங்க".. பல்பு வாங்கிய டிரம்ப்.. சியாட்டில் மேயர் சுளீர்!

அதிபருக்கு எதிராக கருத்தை சொன்ன சியாட்டில் மேயர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: "ஒன்னு செய்யுங்க, பேசாம நீங்க அந்த பதுங்கு குழியிலேயே போய் படுத்துக்குங்க.. எங்களை கொஞ்சம் பாதுகாப்பா இருக்க விடறீங்களா?" என்று அதிபர் டிரம்ப்பை பார்த்து சியாட்டில் நகர மேயர் செம டென்ஷனில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் கழுத்தை முட்டியால் அமுக்கி கொன்றதையடுத்து அமெரிக்கா பற்றிக் கொண்டு எரிகிறது.. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

ஆனாலும் போராட்டக்காரர்களை அடக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்தான் அவர்களை போலீசார் கலைக்க முயன்று வருகின்றனர்.. சில இடங்களில் மிளகு பொடியை கூட மக்கள் மீது தூவினார்கள்.

 வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இந்த போராட்டம், டிரம்ப் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகேயும் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.. திடீரென ஆயிரக் கணக்கானோர் கூடிவிட்டனர்.. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில், அதிபர் கொஞ்ச நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவித்தன.. அவருடைய மனைவி மெலினாவும், மகனும்கூட பதுங்கு குழியில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக கூறப்பட்டது.. இந்த செய்திகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை தந்தது.

நகரம்

நகரம்

இந்நிலையில், கேபிடல்ஹில் தன்னாட்சி மண்டலம் என்று சியாட்டில் மாகாணத்தின் ஒரு பகுதியை ட்ரம்ப் அறிவித்திருந்தார்... அத்துடன் சும்மா இல்லாமல், "உங்கள் நகரத்தை எடுத்துக்குங்க.. நீங்க செய்யவில்லை என்றால், நான் செய்வேன்" என்று சியாட்டில் மேயரை மிரட்டினார் டிரம்ப்... அவரை போலவே வாஷிங்டன் கவர்னர் ஜேய் இன்ஸ்லி-யையும் மிரட்டினார்.. இதற்கு அடிப்படை காரணம் 2 பேருமே ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான்.

நாய்கள்

நாய்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களை "நாய்கள்" என்றார், "உள்நாட்டு பயங்கரவாதிகள்" என்றெல்லாம் வர்ணித்ததுடன், சியாட்டிலை நாங்கள் எடுத்து கொண்டுள்ளோம் என்று ஒரு ட்வீட்டையும் போட்டு அவர்களுக்கு டென்ஷனை எகிற செய்தார்.. உலகிலேயே தன்னுடைய நாடுதான் கொரோனா தொற்றில் முதலில் உள்ளது என்று தெரிந்தும், கொத்து கொத்தாக உயிர்கள் மடிந்து விழுவது தெரிந்தும், அதை பற்றி கொஞ்சமும் அதிபர் கவலையேபடவில்லை.

 ஜார்ஜ்

ஜார்ஜ்

கொரோனா மட்டுமில்லை, ஜார்ஜ் கொலை விவகாரம், தன்னுடைய எதிர்கால அரசியலுக்கே கேள்விகுறியாகிறது என்று தெரிந்துகூட அதையும் சட்டை செய்யவில்லை.. மாறாக, வாஷிங்டன் கவர்னரை சீண்டி கொண்டே இருந்தார்.. தீவிர இடது சாரி கவர்னர் என்று ஒரு வர்ணனையும் செய்து அவரை சூடு ஏற்றினார்.

 காட்டம்

காட்டம்

இதெல்லாம் பொறுத்து பொறுத்து போன சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கன், தற்போது பொங்கி எழுந்துவிட்டார்.. "'கொஞ்சம் எங்கள் எல்லாரையும் பாதுகாப்பாக இருக்க விடுங்க.. நீங்க அந்த பதுங்கு குழிக்கே திரும்பவும் போய்விடுங்கள்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டன் கவர்னர் இன்ஸ்லீ, "இப்படி ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திறமை இல்லாத ஒரு நபர் வாஷிங்டன் மாநில விவகாரத்துக்குள் தலையிடவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.. இதற்கும் டிரம்ப் ஏதாவது பதில் வைத்திருப்பார்.. பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+