Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுருங்கி விரியும் நிலவு.. சந்திரயான் 3 நிலவில் கண்டுபிடித்த நிலநடுக்கத்திற்கு பின்.. ஷாக்கிங் காரணம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கலிஃபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், அப்பல்லோ 17 நிலவில் விட்டுச்சென்ற மாடூல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சிறிய "நிலநடுக்கங்கள்" ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நிலவில் இறங்கிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் பல்வேறு ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது. இவை இரண்டும் தற்போது ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுள்ளன.

How Apollo 17s left-over tech creating moonquakes on the lunar surface

இவை செயல்பாட்டில் இருந்த போது நிலவில் நிலநடுக்கம் ஒன்றையும் கூட பதிவு செய்தது. 'சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் "இயற்கையான சம்பவம்" ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2 வாரம் நிலவில் விக்ரம் லேண்டரில் இருக்கும் Lunar Seismic Activity (ILSA) எனப்படும் நிலநடுக்க ஆய்வு கருவி நிலவில் நிலநடுக்கத்தை பதிவு செய்தது. அதே சமயம் 26ம் தேதி நிலவில் இந்த கருவி "இயற்கையான சம்பவம்" ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதாவது இதை ஸீரோ இயற்கையான நிகழ்வு என்று மட்டுமே கூறி உள்ளது. ஆனால் இது என்ன நிகழ்வு.. நிலநடுக்கமா? வேறு எதுவுமா என்று கூறவில்லை. இதை பற்றி சந்திரயான் 3 ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது என்ன நிகழ்வு என்பது தொடர்பான விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது.

நிலநடுக்கம்: இப்படிப்பட்ட நிலையில்தான் கலிஃபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், அப்பல்லோ 17 நிலவில் விட்டுச்சென்ற மாடூல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சிறிய "நிலநடுக்கங்கள்" ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பல்லோ 17 டிசம்பர் 1972 இல் நாசா மூலம் ஏவப்பட்டது, நாசா விண்வெளி வீரர்களான ஜீன் செர்னான் மற்றும் ஹாரிசன் ஷ்மிட் ஆகியோர் நிலவில் இறங்கி ஆய்வு செய்தனர். அதோடு சில விஷயங்களை விட்டுச் சென்றனர். அமெரிக்கக் கொடி, நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் மற்றும் நிலவில் இருந்து சிக்னலை பூமிக்கு அனுப்பும் ஆய்வு கருவிகளை கொண்ட ஆய்வு மாடூல் ஆகியவற்றை விட்டு வந்தனர்.

இவை இப்போதும் அங்கே உள்ளன. இப்போது இவை செயல்படவில்லை என்றாலும் இன்னமும் அங்கேதான் இருக்கின்றன. நில அதிர்வு ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் நான்கு ஜியோஃபோன்கள் இங்கே இதேபோல் விடப்பட்டது. அக்டோபர் 1976 முதல் மே 1977 வரை இந்த நிலநடுக்க ஆய்வு கருவிகள் இங்கே ஆய்வு செய்தன. அப்போது அங்கே சிறிய அளவில் நிலநடுக்கங்களை இவை பதிவு செய்தது.

இந்த ஆய்வின் மூலம் நிலவில் ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி தினசரி வெப்பநிலை மாறுபாடுகளின் விளைவாக நிலவில் மேற்பரப்பில் நடுக்கம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பூமியைப் போலன்றி, சந்திரனின் மேற்பரப்பு சூடு மற்றும் குளிரை தாங்கும் வளிமண்டலத்தை கொண்டிருக்கவில்லை. இதனால் இரவும் பகலும் வெப்பநிலை மாறுபாடுகளால் அதன் அளவு அதிகரிக்கும்.

அதாவது வெப்பத்தின் போது விரிவடையும், குளிரின் போது சுருங்கும். நிலவின் மேற்பரப்பு இப்படி சுருங்கி விரியும். இதனால் அவை நிலநடுக்கமாக உணரப்படும். இதை thermal moonquakes என்று அழைக்கிறார்கள். இந்த நிலையில்தான் கலிஃபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், அப்பல்லோ 17 நிலவில் விட்டுச்சென்ற மாடூல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சிறிய "நிலநடுக்கங்கள்" ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இவை நிலவில் ஏற்படும் வெப்பத்தின் போது அதிக சூடாகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள நிலவின் நிலப்பரப்பு மேலும் சூடாகிறது. இதன் காரணமாக அங்கே நிலவும் அதிக அளவில் விரிவடைந்து இரவில் அதிகம் சுருங்குகிறது . இதனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் மற்ற இடங்களை விட அதிகம் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் இவை இருக்கும் இடங்களில் மட்டும் அதிக நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+