யுத்தத்தை நிறுத்துங்க- பேச்சுவார்த்தை நடத்துங்க... உக்ரைன், ரஷ்யாவுக்கு ஐ.நா-விடம் இந்தியா வேண்டுகோள்
நியூயார்க்: யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன், ரஷ்யாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவில் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது:
யுத்தத்தை நிறுத்தும் வகையில் பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். இது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா பேசிவருகிறது. நாங்கள் தொடர்ந்து இருதரப்பையும் தொடர்பு கொண்டு பேசுகிறோம்.

ரஷ்யா, உக்ரைன் மோதல்கள், இரு தரப்பிலும் மனித உயிரிழப்புகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது. இந்த யுத்தம் மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. உக்ரைனின் மீதான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இருதரப்பும் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

Recommended Video
உக்ரைன் யுத்தத்தை தொடர்ந்து 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்களை அழைத்து வரும் எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இவ்வாறு ரவீந்தரா கூறினார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications