Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் 2 விண்கற்கள்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் காலி! நாசா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பூமிக்கு மிக நெருக்கமாக இன்று இரண்டு பெரிய விண்கற்கள் கடந்து செல்ல இருக்கிறது என விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை நாசா கண்டுபிடித்திருக்கிறது.

உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

Asteroid Meteor Space

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கற்கள் இரண்டு கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.

'2024 OE' மற்றும் '2024 OO' எனும் பெயர் கொண்ட விண்கற்கள்தான் இன்று பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதில் '2024 OE' விண்கல் 190 அடி கொண்டதாகவும் '2024 OO விண்கல் 88 அடி கொண்டதாகவும் இருக்கிறது. தொலைவை பொறுத்த அளவில், இவை பூமியிலிருந்து சுமார் 75 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடக்க இருக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 75 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.

நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 15 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து சென்றிருக்கிறது. அசுர வேகத்தில் செல்லும் இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.

ஒருவேளை இது பூமியை இது தாக்கினால், விண்கல் விழுந்த இடத்தில் 5-8 கி.மீ தொலைவில் கான்கிரீட் கட்டிடங்கள் எதுவும் இருக்காது. அதாவது நவீன அணு குண்டுக்கு சமமான அளவு வெப்பத்தை இது வெளிப்படுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+