சரியா போச்சு போங்க.. உருமாற்றம் அடைந்த கொரோனா.. கிடுகிடுவென 27 நாடுகளில் பரவியதால் பரபரப்பு
நியூயார்க்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. தற்போது இதன் பாதிப்பு அவ்வளவு தீவிரமாக இல்லாத நிலையில், இதிலிருந்து உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இப்போது வரை 70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் 6.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. அதாவது கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய XEC எனப்படும் புதிய வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்டார்கள். இப்போது அமெரிக்கா, பிரிட்டன் என 27 நாடுகளில் இந்த தொற்று பரவியிருக்கிறது.
இது குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், "ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இது ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா என 27 நாடுகளில் பரவியிருக்கிறது. டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் இது வேகமாக பரவி வருகிறது" என்று கூறியுள்ளனர்.
குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா தொற்றுக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் இந்த தொற்றையும் தடுக்கும் வகையில் இருந்தால், தொற்று பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் புதிய கோவிட் அலையை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். அப்படி நடந்தால் மீண்டும் உலகம் முடங்கும்.
இந்த தொற்று குறித்த எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், தொற்றுக்கான அறிகுறிகளையும் விளக்கியுள்ளனர். அதாவது, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு, பசியின்மை மற்றும் உடல்வலி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்வதெனில், முந்தைய கோவிட் தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட அறிகுறிகளே இதற்கும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை காரணமாக, அமெரிக்காவில் தனிமனித கோவிட் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகின்றன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications