சரியா போச்சு போங்க.. உருமாற்றம் அடைந்த கொரோனா.. கிடுகிடுவென 27 நாடுகளில் பரவியதால் பரபரப்பு
நியூயார்க்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. தற்போது இதன் பாதிப்பு அவ்வளவு தீவிரமாக இல்லாத நிலையில், இதிலிருந்து உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இப்போது வரை 70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் 6.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. அதாவது கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய XEC எனப்படும் புதிய வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்டார்கள். இப்போது அமெரிக்கா, பிரிட்டன் என 27 நாடுகளில் இந்த தொற்று பரவியிருக்கிறது.
இது குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், "ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இது ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா என 27 நாடுகளில் பரவியிருக்கிறது. டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் இது வேகமாக பரவி வருகிறது" என்று கூறியுள்ளனர்.
குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா தொற்றுக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் இந்த தொற்றையும் தடுக்கும் வகையில் இருந்தால், தொற்று பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் புதிய கோவிட் அலையை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். அப்படி நடந்தால் மீண்டும் உலகம் முடங்கும்.
இந்த தொற்று குறித்த எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், தொற்றுக்கான அறிகுறிகளையும் விளக்கியுள்ளனர். அதாவது, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு, பசியின்மை மற்றும் உடல்வலி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்வதெனில், முந்தைய கோவிட் தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட அறிகுறிகளே இதற்கும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை காரணமாக, அமெரிக்காவில் தனிமனித கோவிட் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகின்றன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications