Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஸ்புல்லா கைக்கு வரும் பயங்கர ஆயுதம்! திசை மாறும் போர்? வாக்னர் குழு உதவுவதாக அமெரிக்கா அலறல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனம் மீது 28வது நாளாக இஸ்ரேல் இன்று தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானின் ஹில்புல்லா அமைப்பு சண்டையிட்டு வருகிறது. இச்சூழலில் ஹில்புல்லாவுக்கு ரஷ்யாவின் வாக்னர் குழு ஆயுதங்களை அளிக்க முன்வத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 7ம் தேதியன்று அதிகாலையில் மத்திய கிழக்கில் திடீரென குண்டு சத்தங்கள் கேட்க தொடங்கின. இதற்கு காரணம் ஹமாஸ் படைகள்தான். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று கூறி ஹமாஸ், காசாவிலிருந்து சுமார் 5000 ராக்கெட்களை ஒரேநேரத்தில் வீசியது. கடந்த காலங்களில் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்ததால், இப்படியான தாக்குதல் நடக்கும் என ஏற்கெனவே இஸ்ரேல் கணித்திருந்தது.

 The Wagner group plans to supply weapons to the Hezbollah organization fighting against Israel

எனவே இதை தடுக்க அயன் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தது. இது இஸ்ரேல் மீது பாயும் ராக்கெட்டுகளை வானத்திலிலேயே வழி மறித்து தாக்கி அழித்துவிடும். இருப்பினும் ஒரே நேரத்தில் அதிக அளவில் ராக்கெட்கள் பாய்ந்ததால் அயன் டோம் பாதுகாப்பையும் மீறி இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல், காசாமீது கடுமையான தாக்குதலை தொடுத்தது.

இந்த தாக்குதல் 28வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அதேபோல இஸ்ரேல் ராணுவத்திற்கு சவால்விடும் வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மோதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்திருக்கின்றன. தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. ஐநா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகதான், ரஷ்யாவின் வாக்னர் குழு, ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய முன் வந்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு SA -22 எனும் வான் பாதுகாப்பு அமைப்பை வாக்னர் குழு வழங்க இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதனை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஊகடங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் முன் களத்தில் நின்று சண்டை செய்த அமைப்புதான் வாக்னர் குழு. இது ரஷ்யாவின் கூலிப்படையாகும். ரஷ்யாவில் கூலிப்படைக்கு தடை இருக்கிறது. ஆனால் வாக்னர் குழு காலங்காலமாக ரஷ்ய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அதற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பிரதிபலனாகதான் உக்ரைனுடன் வாக்னர் குழு சண்டையிட்டது. இன்றுவரை உக்ரைனால் ரஷ்யாவை நோக்கி முன்னேறாததற்கு காரணம் இந்த குழுதான்.

இப்படிப்பட்ட குழுதான் லெபனானிலிருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு உதவ முன் வந்திருக்கிறது. இது ஹிஸ்புல்லாவுக்கு வழங்க இருக்கும் SA -22 எனும் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதிலிருந்து பாயும் ராக்கெட்டுகள் ஒலியை விட 3.5 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்டது. இது இன்னும் ஹிஸ்புல்லாவுக்கு கைமாற்றப்படவில்லை. இருப்பினும் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றுதான் அமெரிக்க உளவுத்துறை கணித்திருக்கிறது. இந்த கணிப்பு சாத்தியமானால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மேலும் சில காலம் வரை நீடிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+