மிக மோசமாக நடத்துகிறீர்கள்.. நியூயார்க்கை விட்டு வெளியேறும் டிரம்ப்.. அதிபருக்கே இந்த நிலையா!?
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்த ஊரான நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்த ஊரான நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இவர் இனி புளோரிடாவில் வாழ போவதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அதிக அளவில் வரி சலுகைகளை அனுபவிக்கும் நபர். அவருடைய டிரம்ப் டவர் தொடங்கி கேசினோ கிளப்கள் வரை பலவற்றிற்கு அவர் தொடக்கத்தில் இருந்தே வரி சலுகைகளை அனுபவித்து இருக்கிறார். இப்போதும் பலவற்றுக்கு சலுகைகளை அனுபவித்து வருகிறார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து அமெரிக்கா அதிக வரியை விதிக்கிறது என்று புகார் வைத்து கொண்டுதான் இருக்கிறார். முக்கியமாக நியூயார்க்கில் அதிகமாக வரி விதிக்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றார்.

கடும் கோபம்
தன்னுடைய நிறுவனங்கள் அதிகமாக வரி செலுத்துகிறது. அமெரிக்காவில் பணக்காரர்கள் வாழ முடியவில்லை. சிலருக்கு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக என்னை போன்ற பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள் என்று டிரம்ப் பலமுறை கூறி இருக்கிறார். அதன் வெளிப்பாடாக தற்போது நியூயார்க்கை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
|
என்ன சொன்னார்
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அதில், 1600 பென்சில்வேனியா அவென்யூ, வெள்ளை மாளிகை இந்த இடத்தில் இருப்பது எனக்கு பிடித்துள்ளது. இன்னும் 5 வருடங்கள் கூடுதலாக இங்கே இருப்பேன் என்று நம்புகிறேன். இதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன்.
|
ஆனால் என்ன
ஆனால் என்னுடைய குடும்பமும், நானும் புளோரிடாவில் உள்ள பால்ம் பீச்சை சொந்த, நிரந்தர இருப்பிடமாக மாற்றிக்கொள்ள போகிறோம். நான் நியூயார்க் மற்றும் நியூயார்க் மக்களை எப்போது மனதில் வைத்து இருப்பேன். ஆனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்.
|
அதிக வரி
நான் இந்த நகரத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பல மில்லியன் டாலர்களை வரியாக செலுத்துகிறேன். ஆனாலும் என்னை மோசமாக நடத்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் என்னை மிக மோசமாக நடத்துகிறார்கள். சிலர் என்னை மிக மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள்.

வருத்தம்
இந்த முடிவை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதுவே கடைசியில் சரியான முடிவாக இருக்கும். ஒரு பிரதமராக நியூயார்க் மக்களுக்கு நான் எப்போதும் உதவியாக இருப்பேன். நியூயார்க் நகரத்திற்கும் எப்போதும் என் மனதில் தனி இடம் உண்டு, என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications