லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்க, இயல்பு நிலை திரும்ப ஒரே வழி தடுப்பு மருந்துதான்.. ஐநா
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இந்த நோய் ஒரு தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் தடுக்க போராடி வருகிறார்கள்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியா குட்டரெஸ் புதன்கிழமை கூறுகையில் கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பான மற்றும் நல்ல விளைவுகளை கொண்ட தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வாறு கண்டுபிடித்தால் மட்டுமே உலகில் இயல்பு நிலை திரும்பும். அப்போதுதான் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்க முடியும் என ஐநா உறுப்பினர்களுடனான வீடியோ கான்பிரன்சிங்கில் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த ஊசியை உலகளவில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிக்க சர்வதேச நாடுகள் இணக்கமான ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications