இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறோமா? மறுப்பு தெரிவித்த அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கனடாவுடன் கைகோர்த்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க இறங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து இந்திய தூதுரக அதிகாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்து வருகிறது. ஆனால், சிலர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவிலிருந்து இந்த செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை கண்காணித்து வந்த இந்திய அதிகாரிகள், பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் குறித்து கனடா அரசுக்கு எச்சரித்திருந்தனர். ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு இதனை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.

india usa

சூழல் இப்படி இருக்கையில், கடந்த ஆண்டு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவதி, நிஜ்ஜார் கொல்லப்பட்டடார். அவரது கொலை வழக்கை கடனா அரசு சிரியஸாக விசாரித்தது. இக்கொலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கனடா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கு இடையே பெரும் அதிருப்தியாக வெடித்தது. கடனாவும், இந்தியாவும் அவரவர் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இன்னும் இந்த பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு வரவில்லை.

இப்படி இருக்கையில், அமெரிக்காவிலும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுனை, முன்னாள் 'ரா' அதிகாரியான விகாஸ் யாதவ் கொலை செய்ய முயன்றார் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதாவது பன்னுனை கொலை செய்ய யாதவ் தொழில்முறை கொலையாளியை அணுகியுள்ளார். கடைசியாக ஒருவரிடம் பேரம் பேசியும் முடித்திருக்கிறார். ஆனால், அந்த நபர் அமெரிக்க உளவுத்துறையை சேர்ந்தவர். இப்படியாக விகாஸ் சிக்கியுள்ளார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில், கனடாவிலிருந்து இந்திய தூதுரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதை போல, அமெரிக்காவிலிருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதனை அமெரிக்கா மறுத்திருக்கிறது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "அமெரிக்காவிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை. இப்போதுவரை அப்படியான எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். அதேபோல, விகாஸ் நாடு கடத்தப்படுவாரா? என்றும் செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இது முழுக்க முழுக்க அமெரிக்க நீதித்துறை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்" என்று கூறியுள்ளார்.

கொலை முயற்சி வழக்கில் விகாஸ் யாதவ் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+