மோடிக்கே தெரியும்.. நான் கோபமா இருக்கேன்! வெனிசுலாவை தாக்கிய கையோடு.. டிரம்ப் இந்தியாவிற்கு வார்னிங்
நியூயார்க்: வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலர் மதுரோவை கைது செய்த சூட்டோடு சூடாக இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில்.. உடனடியாக இந்தியா இறங்கி வர மறுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய இறக்குமதிகள் மீதான நாட்டின் தற்போதைய வரிகளை அதிகரிக்கக்கூடும் சூழல் ஏற்படலாம். இந்தியா உடனே எண்ணெய் வர்த்தகத்தில் பின்வாங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர சிக்கல்கள் ஏற்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா ரஷ்யாவுடனான உறவு
டிரம்பின் நிர்வாகம், இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆகஸ்ட் 2025-இல், இந்தியா மீதான வரிகளை 50% ஆக உயர்த்த இது ஒரு காரணமாக மேற்கோள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்கா தனது கவலைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டுப் பேசினார். மோடி ஒரு "நல்ல மனிதர்" என்றும், அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும் என்றும் கூறினார். வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆடியோ பதிவில் பேசிய டிரம்ப், "நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு (மோடிக்கு) தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம். அவர்கள் வர்த்தகம் நடத்துகிறார்கள், அதன் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும்..." என்றார். மேலும், "ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உதவ மறுத்தால், அதன் மீதான வரிகளை அதிகரிக்கலாம்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் டிரம்ப்பின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளது.
வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்குப் பிறகு அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தின்போது டிரம்ப் இந்த கருத்துக்களை வெளியிட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய தாக்குதல்களிலும் எண்ணெய் ஒரு முக்கிய காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா மீதான அட்டாக்
இந்தியா-அமெரிக்கா இடையேயான தொடர்ச்சியான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டிரம்ப்பின் இந்த சமீபத்திய வரி உயர்வு குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. கடந்த அக்டோபரில், இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை இந்தியா நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு "உறுதியளித்ததாக" டிரம்ப் முன்பு உரிமை கோரியிருந்தார். இருப்பினும், மோடி - டிரம்ப் இடையே அத்தகைய உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்தியா டிரம்ப்பின் கூற்றை மறுத்தது.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடந்த இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில் அதிகாரிகளை "குட் நைட், ஹேப்பி நியூ இயர்" என மதுரோ சிரித்த முகத்துடன் வாழ்த்தினார். தான் அமெரிக்க சிறையில் இருக்க போகிறோம் என்று அஞ்சாமல் அவர் துணிச்சலாக சொன்ன இந்த விஷயம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மதுரோவை கைது செய்ய, அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது காரகாஸ் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகேயின் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கார்டெல் ஆஃப் தி சன்ஸ்" எனப்படும் போதை கடத்தல் கும்பலின் தலைமையுடன் அவர் தொடர்புடையவர் என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, அவரது கைது உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை 15 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்திருந்தது.
சரமாரி அட்டாக்
சனி அதிகாலையில் துரிதமாக நடந்த தாக்குதலில் மதுரோவும் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் பெட்ரூமில் ராணுவம் புகுந்து கைது செய்தது. காரகாஸ்வாசிகள், இந்த தாக்குதலின்போது வெடிச்சத்தங்களைக் கேட்டனர்; குறைந்தது ஏழு குண்டுகள் வெடித்து, ராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மதுரோ இல்லாத நிலையில் தற்காலிக ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் அங்கே ஆட்சி நடத்தி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், அமெரிக்க தாக்குதலால் பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டாலும், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications